சென்னை, ஜன.25- வீட்டு வேலைகளுக்கு வந்த இளம் பெண்ணை துன்புறுத்திய புகா ரில் தலைமறைவாக இருந்த ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மார்லினா ஆகியோரை, ஆந்திராவில் வைத்து, தமிழக போலீ சார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந் தூர்பேட்டை அருகே உள்ள திரு நறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த வர் வீரமணி.
இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந் நிலையில் குடும்ப கஷ்டம் காரண மாக இவரது மனைவி செல்வி சென்னை கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சென்னை திரு வான்மியூர் பகுதியில் இடைத்தர கர் சித்ரா என்பவர் மூலம் பன்னி ரண்டாம் வகுப்பு படித்து முடித்த செல்வியின் மகள் ரேகா (வயது 18) என்பவர் சென்னை திருவான்மியூ ரில் உள்ள ஆண்டோ மதிவாணன் என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்க் கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஏழு மாதத் திற்கு முன்பு அழைத்துச் செல்லப் பட்ட நிலையில் தங்களின் குழந்தை அழும்போதெல்லாம் ரேகாவை, மதி வாணனும், அவரது மனைவி மார்லி னாவும் அடித்து துன்புறுத்தி வந்த தாகவும் உடலின் பல இடங்களில் ஆண்டோ மதிவாணன் சூடு வைத்த தாகவும், அவரது மனைவி மார்லினா, ரேகாவின் தலைமுடியை வெட்டி அடித்து துன்புறுத்தி வந்த தாகவும் கூறப்படுகிறது.
இந்த துன்பு றுத்தலை வெளியில் சொல்லக் கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. தற்போது இச்சம்பவம் வெளி யுலகிற்கு தெரியவந்த நிலையில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. உடலின் பல இடங்களில் காயம் அடைந்துள்ள ரேகா உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
போலீசார் வழக்குப் பதிவுசெய்து, ஆண்டோ மதிவாணன்- மார்லினா தம்பதியை தேடி வந்தனர். இந்நிலை யில், தலைமறைவாக இருந்த அவர் கள் இருவரையும் ஆந்திராவில் தனிப்படை போலீசார் கைது செய் துள்ளனர்.