tamilnadu

img

ரூ.5 கோடி செலவில் புதுப்பொலிவு பெறும் அம்மா உணவகங்கள் : மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, ஜூன் 14- சென்னையில் உள்ள அம்மா உணவகங்களின் தரத்தை மேம்படுத்த  ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து செய்து  சென்னை மாநகராட்சி உத்தர விட்டுள்ளது.  கடந்த 2011ஆம் ஆண்டு மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா  தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்றது.  

அப்போது 2013ஆம்  ஆண்டு கொண்டு வரப்பட்ட திட்டங்க ளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது “அம்மா உணவகம்”.  அதிமுக ஆட்சியிலும்,  கொரோனா,  புயல்,  வெள்ளம் காலகட்டத்திலும் அம்மா உணவகங்கள் பொது மக்களுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தன.  இதனிடையே 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்குப் பின் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக  கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்ச ராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

இந்நிலையில்,  ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர்,  முன்னதாக செயல்பட்டு வந்த அம்மா உணவகம் வழக்கம் போல இயங்குமா என்ற கேள்வி எழுந்தது.  ஆனால் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.  இது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் சென்னையில் செயல்படும் அம்மா உணவகங்களை தரத்தை மேம்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் வரவேற்பு அதிகரித்ததால்,  2016ஆம் ஆண்டு, வார்டுக்கு இரண்டு வீதம், 407 உணவகங்களாக அதிகரிக்கப்பட்டது.  நீதிமன்ற வழக்கு,  மெட்ரோ ரயில் பணி உள்ளிட்ட காரணங்களால் 16 உணவகங்கள் மூடப்பட்டன.  சாப்பாட்டின் வகைகளை மாற்றி,  ருசியாக வழங்கினால், விற்பனை அதி கரிக்க வாய்ப்புள்ளதாக பரிந்துரைக் கப்பட்டது. இந்நிலையில் சுமார்  ரூ.5 கோடி செலவில் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து அம்மா உணவகங்க ளின் கட்டடங்களை சீரமைத்து,  வண்ணம் பூசி புதுப்பொலிவுடன் மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.  மேலும், உணவகங்களின் சமையல றையில் பிரிஜ்,  கிரைண்டர்,  மிக்ஸி  உள்ளிட்ட பழுதடைந்த இயந்திரங் கள், சமையலறை பொருட்களை மாற்றவும், மண்டல அதிகாரிகளுக்கு, மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. வரும் காலங்களில்,  அம்மா உணவகம் தொடர்பாக புகார் வந்து,   மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டால்,  சம்பந்தப்பட்ட அதிகாரி கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கள் கூறுகையில், அம்மா உணவகங் களை மூடும் எண்ணம் இல்லை.  உணவகங்களையும் சீரமைத்து புதுப் பொலிவுடன் மாற்ற உத்தரவிடப் பட்டுள்ளது. பயனாளிகளின் வருகையை அதிகரிக்க,  ருசியான புதிய உணவு வகைகளை அறிமுகப் படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

391 உணவகங்கள் கடந்த 11 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகின்றன.  இங்கு, இட்லி ஒரு ரூபாய்,  பொங்கல்,  சாம்பார்,  எலுமிச்சை  சாதம், கருவேப்பிலை சாதம் தலா 5 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய்,  2 சப்பாத்தி 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  குறைந்த விலையில் கிடைப்பதால், கூலி தொழிலாளர்களும், ஏழை மக்களும் பெரிதும் பயனடைகின்றனர்.

தினசரி ரூ.5 லட்சம் வீதம்,  ஆண்டுக்கு, ரூ.20 கோடி கிடைக்கிறது.  ஆனால், குறைந்த விலைக்கு உணவுகளை வழங்குவதால் ஆண்டுக்கு 140 கோடி ரூபாய் செலவாகிறது.  ஆண்டுதோறும், 120 கோடி ரூபாய் நஷ்டத்தில் செயல்படுகிறது.  உணவகத்தின் சுவை ஒரே விதமாக இருப்பதால்,  சாப்பிடும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.