“அண்ணாமலை வந்தபிறகு சமூகவிரோதிகளின் கூடாரமாக பாஜக மாறிவிட்டதை தமிழிசை தெளிவுபடுத்தி உள்ளார். தமிழிசை பேசியது தவறு என்றால், தில்லிக்கு அழைத்து கண்டித்திருக்கலாம். ஆனால், மேடை நாகரிகம், பண்பாடு என்னவென்று தெரியாமல் அமித்ஷா நடந்து கொண்டுள்ளார். மேடையில் இருந்த அமித்ஷாவின் உடல்மொழியே அவர் ஆத்திரத்தில் தமிழிசையிடம் பேசியதை உணர முடிந்தது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.