சிதம்பரம் நகரத்திலுள்ள 33-வது வார்டு அம்பேத்கார் நகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களை வருவாய், நகராட்சி ஊழியர்கள் அங்கிருந்து காலி செய்யக்கோரி தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, நகரச் செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் முத்து உள்ளிட்ட வர்கள் சம்பந்தபட்ட பொதுமக்களுடன் வட்டாட்சியரை சந்தித்து குடியிருக்க மாற்று இடம் கொடுத்துவிட்டு குடியிருப்பு களை காலி செய்ய வேண்டும். அதுவரை அங்கு வசிக்கும் மக்களை தொந்தரவு செய்யக் கூடாது என்று மனு அளித்த னர். மனுவை பெற்ற வட்டாட்சியர் இளவரசன் இதுகுறித்து முடிவு எடுப்பதாக உறுதி கூறினார்.