tamilnadu

img

அனைத்து க் கட்சி கோரிக்கையை ஏற்று 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து

சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததை வரவேற்று இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட் டத்தையும் ரத்து செய்திருக்கிறார்.

இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:-"ஊரடங்கு நேரத்தில் ஜூன் 1ஆம் தேதி பத்தாம் வகுப்புத் தேர்வு நடத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து, 9 லட் சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிர் பாதுகாப்புக் கருதி, அந்தத் தேர்வைத் தள்ளிவைக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் - ஆசிரியர்கள் பெற் றோர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் அதிமுக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்.கொரோனா தொற்று தொடர்ந்து உச்சத்திற்குச் செல்லும் என்றும்; அரசே அறிவித்தும் கூட - மாணவர்களின் பாதுகாப்பு, தேர்வு மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் பாதுகாப்பு - மாணவர்களை அழைத்துவரும் தாய்மார்களின் பாதுகாப்பு குறித்த எவ்விதக் கவலையும் இல்லாமல் ஜூன் 15-ஆம் தேதி தேர்வை நடத்துவோம் என்று பிடிவாதமாக மீண்டும் அறிவித்தார்கள்.இதைத் தொடர்ந்து தி.மு.க. சார்பிலும், அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது.  

அந்த வழக்கு விசாரணையின் போது, “பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்தியே தீருவோம்” என்று அரசு அடம்பிடித்தது.  அரசியல் கட்சிகளின் கருத்தைக் கூட அல்ல - உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கவலையைக் கூட கருத்தில் கொள்ளாமல் ஆணவத்துடன் மறுத்து விட்டது.இந்நிலையில், திமுக உள் ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆலோசித்து, அதிமுக அரசின் மாணவர் விரோதப் போக்கை கண்டிக்கும் வகையிலும் ஜூன் 10 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, அவசரமாக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ள முதலமைச்சர்  பழனிசாமி, “மாணவர்களுக்கு 10-ஆம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்படும். 'ஆல் பாஸ்' என்று அறிவிக்கப்படும்” என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது.அதேசமயம், முன்கூட்டியே இம்முடிவை எடுத்திருந்தால் மாணவர்கள், பெற்றோரின் பதற்றத்தையும், மன உளைச் சலையும் தவிர்த்திருக்கலாம். இனிமேலாவது கவனச் சிதறல் 
களில் ஈடுபடாமல் முழுமையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும்.

தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்ற அரசின் முடிவை மாணவர்கள், பெற்றோர் மற்றும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.மேலும், அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டிருப்பதால், அனைத்துக் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

;