tamilnadu

img

விமானக் கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு

சென்னை, நவ.4-  சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பயணிகள் அதிக அளவில் வருவதைப் பயன்படுத்தி, கட்டணத்தை பல மடங்காக  விமான நிறுவனங்கள் உயர்த்தின. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் தீபாவளிக்காக சொந்த ஊர்களுக்கு சென்று சென்னை திரும்பும் மக்கள் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காததால் விமானங்களில் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. அதேபோல், திருவனந்தபுரம். கொச்சி, ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா, அந்தமான் ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமான கட்டணங்களும் அதிகரித்துள்ளன. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமான கட்டணம் ரூ.11,925 ஆகவும், திருச்சியில் இருந்து சென்னைக்கு வருவதற்கு ரூ.11,109 ஆகவும் அதிகரித்துள்ளது. கோவையில் இருந்து சென்னை வருவதற்கு விமான கட்டணம் ரூ.10,179 ஆகவும், சேலத்தில் இருந்து சென்னைக்கு வருவதற்கு ரூ.9,516 ஆகவும் விமான கட்டணம் அதிகரித்துள்ளது. பயணிகள் அதிக அளவில் வருவதை பயன்படுத்தி விமான நிறுவனங்கள் கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தியதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.