சென்னை, செப். 13- அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்திய நாராயணன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்கு நரகம் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை, கோவையில் அவருக்குத் தொடர்புடைய 18 இடங்களில் புதன்கிழமை (செப்.13) சோதனை நடந்தது. சத்தியநாராயணன் கடந்த 2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் தி.நகர் தொகுதி எம்எல்ஏ வாக இருந்தார். அவரது பதவிக் காலத்தில் அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.64 கோடி சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. சென்னை, கோவை, திருவள்ளூர் என அவருக்குத் தொடர்புடைய 16க்கும் மேற்பட்ட இடங்க ளில் சோதனை நடந்தது. இந்தச் சோதனை நடந்த இடங்களில் அதிமுகவி னர் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டது. மேலும், சத்தியநாரா யணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டு மாதங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக வடசென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் உள்ளிட் டோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.