பொன்முடி வழக்கில் சந் தேகத்தின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞரும், மாநிலங்களவை திமுக எம்.பி.யுமான என்.ஆர். இளங்கோ தெரி வித்துள்ளார்.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றம், பொன்முடியை குற்றவாளி என்று கருதுகிற இடம் எதுவென்றால், பொன்முடி யின் மனைவி சரியாக வருமான வரி செலுத்தவில்லை என்ற ஒரே காரணத்தை வைத்துத்தான். அதன்பேரிலேயே விடு தலையை ரத்து செய்துள்ளது. பொன்முடி யின் மனைவி விசாலாட்சி மிகவும் லாபகர மாக தன்னுடைய தொழில்களை நடத்தி வந்தார் என்பதை, இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட வங்கி அதிகாரிகள், வரு மான வரித்துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆடிட்டரின் சரியான அறிவுரை இல்லாததால் பொன்முடி மனைவி விசாலாட்சி குறித்த நேரத்தில் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. எனினும் அனைத்து வருடங்களுக்கும் முன்கூட்டியே வரி செலுத்தியுள்ளார். அதற்கு ஆதாரங்கள் உள்ளன. அவற்றை உயர் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ள தவறி விட்டது. நீதிபதி என்பவர் எந்த சந்தேகத் திற்கும் அப்பாற்பட்டவர். ஆனால் சட்டத் தின் அடிப்படையில், அதிமுக ஆட்சியின் போது அவர் சட்டத்துறை செயலாளராக பணியாற்றினார். அப்போது இந்த வழக்கில் இந்த சொத்துகளை முடக்கம் செய்வதற்கான கோப்புகளை அவர் கையாண்டுள்ளார். இதனை Latent Bias (நடக்க காத்திருந்த பாரபட்சம்) என சட்ட முறையில் கூறுவார்கள். இதை நாங்கள் நீதிபதியிடமே எடுத்துச் சொன் னோம். “நீங்கள் அப்போதே சொல்லியிருந் தால் கூட நான் வழக்கில் இருந்து விலகி யிருக்க மாட்டேன்” என பதிலளித்தார். இது முழுக்க முழுக்க சட்டம் சார்ந்த பிரச்சனை. இதையெல்லாம் உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் முன்வைப்போம்.
இவ்வாறு வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ குறிப்பிட்டுள்ளார்.