tamilnadu

ஜூன் 14-ல் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்...

சென்னை:
ஜூன் 14ஆம் தேதி சென் னையில் அதிமுக எம்எல்ஏ-க் கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல் வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-“அதிமுக எம்எல்ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 14-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு ராயப்பேட்டையிலுள்ள தலைமை அலுவல கத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது.எம்எல்ஏ-க்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறை களைப் பின் பற்றியும் தனிமனித இடைவெளியைக் கடைப் பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.கொரோனா காரணமாக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏ-க்கள் தவிர்த்து வேறு யாரையும் அனுமதிக்க இயலாது.”இவ்வாறு அந்த அறிக் கையில் தெரிவித்துள்ளனர்.

;