சென்னை, செப். 18 - அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் பிரச்சனைகளை தீர்க்க கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு போக்குவரத்து அனைத்து சங்க கூட்டமைப்பு கடிதம் அனுப்பி யுள்ளது.
சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப், எம்எல்எப் ஆகிய சங்கங்களின் தலை வர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய கடி தத்தின் சுருக்கம் வருமாறு:
1998 ஆம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு மாறாக, 1.4.2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியம்தான் பொருந்தும் என அரசாணை வெளியிடப் பட்டது. ஆனால், தேசிய (புதிய) ஓய்வூதிய சட்டம் சம்பந்தமான எவ்வித முடிவும் மேற் கொள்ளப்படவில்லை. 20 ஆண்டுகளாக எந்தவொரு ஓய்வூதிய திட்டமும் இல்லாத ஒரே மாநிலமாக இருப்பது தமிழ்நாடு மட்டும் தான். எனவே 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒப்பந்தப்படியான ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழித்தடங் களில் நட்டம் என தெரிந்தே சேவை நோக்கத்தோடு பேருந்துகள் இயக்கப்படு கின்றன. அதனால் ஏற்படும் இழப்பை ஈடு கட்ட 2022ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப் பட்டது. அந்த அரசாணையை செயல்படுத்தி, வரவுக்கும் செலவுக்கும் வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும். நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, 22 மாத காலமாக ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, ஓய்வு பெறும் அன்றைய தினமே ஓய்வு கால பண பலன்கள் வழங்கப் படுவதில்லை. இதை சரி செய்யவேண்டும்.
ஓய்வூதியர்கள்
ஓய்வூதியர்களுக்கு 105 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டு வரு கிறது. அகவிலைப்படி உயர்வு வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டது. அதை எதிர்த்து உச்சநதிமன்றம், உயர் நீதிமன்றங் களில் செய்யப்பட்ட மேல்முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. சட்ட வரை முறைகளை மீறி சீராய்வு மனு தாக்கல் செய்ததையும் சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. எனவே நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.
பேச்சுவார்த்தை
15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை ஓராண்டு தாமதமாக தொடங்கப் பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் சங்கங்களை முறைப்படுத்தி, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம், காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வது, வாரிசு வேலை வழங்குவது உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் பேசி ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.