சென்னை,நவ.22- நடிகை திரிஷா குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்த விவகாரத்தில், நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு நேரில் ஆஜராக சென்னை காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் அண்மையில் கருத்து தெரிவித்தார். இந்தப் பேச்சுக்கு திரைத் துறை மட்டுமல்லாமல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் கண்ட னங்கள், எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்தது. மேலும் தேசிய மகளிர் ஆணை யம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத் தில், ‘நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது மிகுந்த கவலை அளிப்ப தாக உள்ளது. இந்த விவகாரத்தில் தாங்கள் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக் கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த பரிந்துரையை ஏற்று மன்சூர் அலி கான் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்த னர்.
இந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி, மன்சூர் அலிகானுக்கு 41 ஏ எனப் படும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.