சென்னை, டிச. 21 - வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், தமிழக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி க்கு தலா 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்ச ராக பதவி வகித்த போது, வருமா னத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதி ராக 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதி மன்றம், கடந்த 2016-ஆம் ஆண்டு பொன் முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பளி த்தது. இந்நிலையில், தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த்வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
இதனிடையே, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு சென்ற நிலையில், அவருக்குப் பதிலாக நீதிபதி எம். ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்தார்.
இந்த விசாரணையின் முடிவில், வியாழனன்று (டிசம்பர் 21) தீர்ப்பு வழங்கிய நீதிபதி என். ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து உத்தர விட்டார். ரூ. 50 லட்சம் அபராதத்தை செலுத்த தவறினால், மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றதோடு, மேல்முறையீடு செய்வதற் காக 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி ஜெயச்சந்தி ரன் உத்தரவிட்டார்.