சென்னை,மே12- சென்னை அசோக் நகர் 10-வது தெருவில் வசித்து வருபவர் மாரியப்பன். இவரது மனைவி சரிதா. இவர்க ளது வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் கலந்து கொள்வதற்காக உறவி னர்கள் பலர் வீட்டுக்கு வந்திருந்தனர். சனிக்கிழமையன்று இரவு அனைவரும் வீட்டுக்குள் தூங்குவதற்கு இடவசதி இல்லாததால் உறவினர்கள் தில்லை நாயகி, மூதாட்டி ஜோதி, கவுதம் நிஷா உள்ளிட்ட பலர் வீட்டுக்கு வெளியே தூங்கினர்.
சென்னையில் உறவினர் வீட்டுக்கு வந்திருந்த பெண் ஒருவர் ஞாயிறன்று அதிகாலை கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிச் சென்றார். அதிகாலை 5 மணி அளவில் 10-வது தெருவுக்குள் நுழைந்த அவரது கார் திடீரென அதிவேகமாக வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டு இருந்த சரிதா உள்ளிட்ட7 பேர் மீது ஏறியது. இதில் 7 பேரின் கால்களும் நசுங்கின. இதனால் வலி தாங்க முடியாமல் அனைவரும் அலறி துடித்தனர். இதில் 4 பேர் பெண்கள் ஆவர்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது 7 பேர் காயம் அடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்த அனைவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சரிதா, தில்லை நாயகி ஆகிய இருவரின் கால் எலும்பு கள் உடைந்துள்ளன. இதுபற்றி கேள்விப்பட்டதும் கிண்டி போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீ சார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது குறுகலான சந்தில் காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியது மகா ராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வைசாலி பாட்டீல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது கவனக்குறைவு, அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.