tamilnadu

img

சிபிஎம் போராட்டத்தைச் சீர்குலைக்க அதிகார துஷ்பிரயோகம்

சென்னை, ஆக. 29 - ஜனநாயகம் - மனித உரிமை களுக்கு எதிராக, அதிகார துஷ்பிர யோக நடவடிக்கையில் ஈடுபடும் கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் ரகுபதி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வியாழனன்று (29.08.2024) சென்னை மாநகரக் காவல்துறை ஆணையருக்கு புகார்க் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

பெருநகர சென்னை மாநக ராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு  துறைகளில் அறிவித்துள்ள தனியார்மய மாக்கல், வரிஉயர்வு, மாநகராட்சிப் பள்ளிகள் மூடல் ஆகியவற்றைக் கை விட வேண்டும் என வலியுறுத்தியும், தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்தும், எங்களது கட்சி யின் சார்பில் புதன்கிழமை (2024 ஆகஸ்ட் 28) அன்று ரிப்பன் மாளிகை அருகில் எனது தலைமையில் போராட்டத்திற்கு திட்டமிடப் பட்டிருந்தது.

பெண் தோழர்களையும் பிடித்துத் தள்ளி அராஜகம்

சென்னை மாநகராட்சி அலுவல கம் அருகில் உள்ள விக்டோரியா கட்டட நுழைவு வாயில் அருகில் ஆர்ப்பாட்டத்திற்காக எங்களது தோழர்கள் திரண்டிருந்தனர். காலை சுமார் 11 மணி அளவில்  அப்பகுதிக்கு நானும் மற்றும் கட்சி யின் முக்கியத் தலைவர்களான பி. சம்பத், என். குணசேகரன் மற்றும் தோழர்கள் சென்றபோது, கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ரகுபதி, இங்கு ஆர்ப்பாட்டம் நடத்து வதற்கு பதிலாக 50 மீட்டர் தள்ளி  ஆர்ப்பாட்டம் நடத்துமாறு எங்களி டம் தெரிவித்தார். அவர் கூறியபடி 50 மீட்டர் தள்ளி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு எங்களது தோழர்களோடு சென்றோம். ஆனால், துணை ஆணையர் அவர்கள் மேலும் உட்புற சந்தில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துமாறு வலியுறுத்தியதுடன் காவல்துறை யினர் மூலம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களை பிடித்துத் தள்ளினார். பெண்கள் என்றும் கூட பாராமல் அவர் களையும் பிடித்து தள்ளினார்.

ஒருமையில் பேசி  அடாவடி மிரட்டல்

அப்போது அவரிடம், “பொது மக்களுக்கு எந்த இடையூறும் இல்லா மல் ஏற்கெனவே ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டு இருந்த இடத்திற்கு பதிலாக, நீங்கள் சொன்னதுபோல், 50 மீட்டர் தள்ளிவந்த பிறகும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்காமல் தடுப்பது மற்றும் தள்ளி விடுவது சரியா? நீங்கள் தான் திட்டமிட்டு ஏராள மான காவலர்களை குவித்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறீர்கள். உங்களது நடவடிக்கை தான் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது” என தெரிவித்த போது, துணை ஆணையர் ரகுபதி எங்களை ஒருமையில் பேசியும், கையை வைத்து தள்ளியும், அடா வடித்தனமாக செயல்பட்டார். இதற்கு நாங்கள் மறுப்பு தெரி வித்த போது ‘கைது செய்ய வேண்டி  வரும்’  என மிரட்டும் வகையில் சத்தம் போட்டார். பத்திரிகையா ளர்களையும், ஊடகவியலாளர் களையும் புகைப்படம், ஒளிப்படம் எடுக்க விடாமல் தடுத்து மிரட்டி னார். கடைசி வரையில் காவல் துறையினரை வைத்து சூழ்ந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்து வதற்கே அவர் அனுமதிக்க வில்லை. அனைத்தையும் பொறுத்துக் கொண்டு சுமூகமாகப் போராட்டத்தை முடிக்கும் வகையில் பத்திரிகை யாளர்களிடம் பேட்டிகொடுத்து விட்டு கலைந்து செல்ல ஆரம்பித்த உடன், என்னிடம் ‘உங்களை கைது செய்கிறோம்’ என்று கூறி வாகனத்தில் ஏற்றிச் சென்றார்.

வேறெந்த மாநிலத்திலும் இல்லாத நடைமுறை

சென்னை மாநகருக்குள் மக்கள் பிரச்சனைகளில் ஜனநாயக  ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்து வதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்குவதில்லை. மாறாக, மக்களுக்கு சம்பந்தமே இல்லாத இடத்தை ஒதுக்கி ஆர்ப்பாட்டத்தை நடத்த நிர்ப்பந்திக்கின்றனர். இந்தி யாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நடைமுறை இல்லை. சென்னை மாநகரக் காவல்துறை யினரின் இந்த போக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிப்ப தாக அமைந்துள்ளது.

ஜனநாயக ரீதியில் நடைபெறும் ஒரு சாதாரண ஆர்ப்பாட்டத்தை- பொதுமக்களுக்கும் போக்குவரத் திற்கும் எந்த இடையூறுமின்றி அமைதியான முறையில் நடத்து வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டிய துணை ஆணையர், இதற்கு மாறாக, அனாவசியமாக அதட்டும் தொனியிலும், ஒருமை யில் பேசியும், சட்டம் ஒழுங்கு  பிரச்ச னையை உருவாக்கும் வகை யிலும், மனித உரிமைகளை பறிக்கும் வகையிலும் திட்டமிட்டு சீர்குலைவு நடவடிக்கையில் நடந்து கொண்டுள்ளதானது அதி கார துஷ்பிரயோக நடவடிக்கையே ஆகும்; சட்ட விதிகளுக்கும் புறம்பானதாகும். இப்படிப்பட்ட ஒருவர் மாநகரத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எப்படி முறையாக கையாள்வார், சாதாரண பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்வார் என்கின்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

துறை ரீதியான  நடவடிக்கை வேண்டும்

எனவே, அமைதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் எங்கள்  கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு அதனை சீர்குலைக்கும் நோக்கோடும், அதிகார துஷ்பிர யோகம் மற்றும் மனித உரிமை மீறல் நடவடிக்கையில் ஈடுபட்ட கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ரகுபதி அவர்கள் மீது துறை ரீதி யான விசாரணை மேற்கொண்டு அவர் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள் ளார்.