சென்னை, மார்ச் 11- தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக் கண்ணு, பொதுச்செயலா ளர் கே.சாமுவேல்ராஜ் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பெண் கல்வி யை ஊக்கப்படுத்தும் நோக் கத்துடன் ஒவ்வொரு ஆண் டும் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கி வருகிறது.
ஆதிதிராவிடர் மாணவி களில் 3, 4, 5 ஆகிய வகுப்பு களை சார்ந்த மாணவி களுக்கு ரூ.500, 6 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.1,000 மற்றும் 7, 8 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.1,500 என்ற அடிப்படையில் ஆண்டுக்கு ஒரு முறை இத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் படி 2022 - 2023 கல்வி ஆண் டில் ரூ.43.44 கோடி வழங்கப் பட்டுள்ளது.
இந்த ஆண்டு தற்போது வரை பல்வேறு மாவட்டங்க ளில் பல ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கு தொகை வழங்கப்படவில்லை. இது குறித்து துறையின் இயக்கு நரிடம் கேட்கப்பட்ட போது, ஆதார் எண்ணோடு இணைப் பதில் தாமதம் ஏற்படுகிறது என்றும், இரண்டு வாரத்தில் கொடுத்து முடித்து விடு வோம் என்று தெரிவிக்கப்பட்டது.
கல்வி ஆண்டு நிறைவ டையவுள்ள நிலையில் உட னடியாக இத்தொகையை வழங்கிட வேண்டும். எதிர் வரும் காலத்தில் இத்திட் டத்தை செயல்படுத்தும் முறையை மேலும் எளி மைப்படுத்தி, கல்வி ஆண்டு துவங்கிய சில மாதங்களி லேயே தமிழக அரசு இத் தொகையை மாணவிக ளுக்கு வழங்கிட வேண்டும்.