tamilnadu

‘பூத் சிலிப்’ வழங்கும் பணி தொடங்கியது

சென்னை, ஏப். 1 - தமிழ்நாட்டில் உள்ள 39 தொகு திகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளில் ஏப்ரல் 19 அன்று ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. திமுக தலைமையில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, முஸ்லீம் லீக், கொமதேக கட்சி களின் சார்பிலும் அதிமுக, பாஜக கூட்டணிக் கட்சிகள் மற்றும் சுயே ட்சைகள் சார்பிலுமாக மொத்தம் 950 பேர் வேட்பாளர்களாக கள மிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி ஏப்ரல் 1 முதல் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை மே ற்கொண்டு வருகின்றனர். வீடு வீடாக சென்று அதிகாரிகள் பூத் சிலிப் வழங்கி வருகின்றனர். பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி, ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் நிறை வடையும் என்று தேர்தல் ஆணை யம் தெரிவித்துள்ளது.

ரூ.109.76 கோடி பறிமுதல்
தமிழ்நாட்டில் மார்ச் 31 வரை ரூ. 109.76 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

புதிதாக அறிமுகம் செய்த  ‘சி விஜில்’ செயலி மூலம் 1,822 புகார்கள் பெறப்பட்டு  1,803 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள் ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரி வித்துள்ளார்.

இன்று ஆலோசனை
மக்களவை தேர்தல் முன்னேற் பாடுகள் குறித்து வருமான வரித்து றை, சுங்கத்துறை, ஜிஎஸ்டி, அமலாக்கத் துறை அதிகாரிகளு டன் தமிழக தலைமை தேர்தல் அதி காரி சத்யபிரதா சாகு ஏப்ரல் 2 அன்று ஆலோசனை நடத்து கிறார். இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 4ஆம் தேதி, மாவட்டத் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், காவல் துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

வாக்காளர் விவரம்: புதிய செயலி அறிமுகம்!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் மார்ச் 28-ஆம் தேதியுடன் இறுதி செய்யப்பட்டு, அவை சம்பந்தப்பட்ட மக்களவைத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இருக்கிறதா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள பிரத்யேக செயலி நடைமுறையில் உள்ளது. ‘ஓட்டர் ஹெல்ப் லைன்’ என்ற செயலி மூலம் வாக்காளர் பட்டியல் பெயர்களை உறுதி செய்யலாம். வாக்காளர்கள், தங்களது தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களையும் அறிந்திடலாம். இந்தச் செயலிகளை ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வாக்காளர்களின் வசதிகளைக் கருத்தில் கொண்டு மேலும் பல புதிய செயலிகளை அறிமுகப்படுத்தத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.