tamilnadu

நீதி தேடும் உறுதிக்கோர் உதாரணம்

மிகவும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் சிபிஎம் கட்சியின் நீடித்த ஆதரவுடனும் மக்களின் ஆதரவுடனும் நடைபெற்ற ஏழை பழங்குடியின மக்களின் இடைவிடாத போராட்டம் பெற்ற வெற்றியை வாச்சாத்தி  தீர்ப்பு பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது சிறப்புடன் குறிப்பிடத்தக்கது. மக்களின் குடியிருப்புகள் அழிக்கப் பட்டன. பெண்கள் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். கிணறுகள் மாசுபடுத்தப்பட்டன. குடிநீரில் விஷம் கலக்கப்பட்டது. சட்டம், ஒழுங்கை காப்பவர்களாக இருக்க வேண்டிய மாவட்ட வனம், வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினரால் இந்த சிறிய கிராமத்தில் நடந்த கோரமான சோகம், இவர்களுடைய போரா ட்டம் மட்டும் இல்லை என்றால் மக்களின் கூட்டு மனசாட்சியி லிருந்து அழிக்கப்பட்டிருக்கும். கடும் வறுமையிலும் நீதி தேடும் உறுதிக்கு வாச்சாத்தி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 30 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ட னைகள் உறுதி செய்யப்பட்ட நீதிமன்றங்களின் பங்கை இது மறுக்கவில்லை. மக்கள் இயக்கம் தான் ஜனநாய கத்தின் சாராம்சம் என்பதையும் அவர்கள் இல்லை என்றால் நாடு அராஜகமாயிருக்கும் என்பதை யும் வாச்சாத்தி சம்பவம் சந்தேக த்திற்கு இடமின்றி நிரூபிக்கிறது.