சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகரில் புதிதாக அஞ்சல் நிலையம் திறக்கப்பட்டது. இங்கு ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் பலகை உள்ளது. தமிழ் மொழியில் பெயர் பலகை இல்லை. இதனால் ஆங்கிலம் தெரியாதவர்கள் அஞ்சல் நிலையம் இருப்பது தெரியாமல் அவதி அடைகின்றனர். எனவே, வில்லிவாக்கம் தபால் நிலையத்தில், தமிழ் மொழியை இடம் பெறச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா?