tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க  ரூ.5 கோடி ஒதுக்கியது அரசு

சென்னை,டிச.7- தமிழ்நாடு அதன் வளமான பல்லு யிர் பெருக்கத்திற்கு நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கிடையே தனித்து நிற்கிறது. இருப்பினும், காலநிலை மாற்றத்தின் மாறுபாடு களால்,  சில உயிரினங்கள் உலகின் அழிவின் விளிம்பில் உள்ளன.

இந்த உயிரினங்களின் பாது காப்பின் அவசியம் வலியுறுத்தப் பட்டுள்ளது, இதற்கு தீர்வு காண, ‘தமிழ்நாடு அழிந்து வரும் உயிரினங் கள் பாதுகாப்பு நிதி’யை ஏற்படுத்த முடிவு செய்துள்ளதாக சட்டப்பேர வையில் அறிவிப்பு வெளியிடப் பட்டது. அதனை செயல்படுத்தும் வகை யில் அதனை பாதுகாப்பதற்கான நோக்கங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அர சாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு மாநிலத்தில் அழிந்து வரும் அரிய வகை உயிரி னங்களை கணக்கெடுத்து, மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.

மேலும் இனங்கள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தின் வடிவில் ஒவ்வொரு இனத்திற்கும் குறிப்பிட்ட மேலாண்மை உத்திகள் மற்றும் அணுகுமுறைகளை உரு வாக்குவதன் மூலம் தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள அழிந்து வரும் உயிரினங்களின் பாதுகாப்பை உறுதி செய்யலாம் என்றும் கூறப் பட்டுள்ளது. அதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்த முதற்கட்ட மாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

சென்னை, டிச. 7 - தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதி களின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சனிக்கிழமை யன்று (டிச.7) காலை 8.30  மணி அளவில் ஒரு காற்ற ழுத்த தாழ்வு பகுதி உரு வாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு -  வடமேற்கு திசையில் நகர் ந்து சற்று வலுவடைந்து, மேலும் இது மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 11 வாக்கில் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிக ளில் இலங்கை - தமிழக கடற்கரையை நோக்கி நக ரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, டிசம்பர் 7 முதல் 9 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள் ளது.

தீபமலையில் இன்று ஆய்வு

திருவண்ணா மலை,டிச.7- நிலச்சரிவு ஏற்பட்ட தீப மலையில் புவியியல் ஆய் வாளர் சரவணவேல் தலை மையிலான 8 பேர் குழு ஞாயிறன்று ஆய்வு மேற்கொ ள்ள உள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடை பெற்றது.  தீபமலை மீது பக் தர்கள் மலையேற அனும திப்பது குறித்து புவியியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்கிறார்கள்.

4,089 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை,டிச.7- தீபத் திருவிழாவை முன்னிட்டு  விழுப்புரம் கோட்டம் சார்பில் திரு வண்ணாமலைக்கு 4,089 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் செய்யப்பட உள்ளது. திருவண்ணா மலையில் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் மூலம் கிரிவலப் பாதை க்கு செல்ல 40 மினி பேருந்து கள் இயக்கப்படும். பயணி களின் வசதிக்காக 150 தனி யார் பேருந்துகளை வாட கைக்கு எடுத்து இயக்க வும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா 

சென்னை,டிச.7- புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு நூலான ‘ICONOCLAST’ (ஐகானோக் ளாஸ்ட்) நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன், டாக்டர் அம்பேத்கரின் பேரனும் சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே, விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.