குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து விழுப்புரத்தில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தை விளக்கி துண்டு பிரசுரம் பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி தலைமை தாங்கி பொதுமக்களி டம் துண்டு பிரசுரம் வழங்கினார். மாவட்டத் தலைவர்கள் மு.யா.முஸ்தாகிதீன், இப்ராஹிம், முகமது பிலால் ரஜீத், முகமது ரபிக், உலமாக்கள், முத்தவல்லிகள், மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.