சென்னையில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஞாயிறன்று இரவு முதல் மிக்ஜம் புயல் வலுவடைந்ததால் மிக கனமழை பெய்து வருகின்றது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் 20 செ.மீ மழை பெய்து வருகின்றது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 29 செ.மீ மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் பெய்த கனமழையை விட இம்முறை அதிகளவில் மழை பெய்து வருவதாக தகவல்கள் வருகின்றன. தாழ்வான இடங்களில் இருக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் சில நாட்கள் எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. மற்ற ஊர்களில் இருக்கும் மக்கள் சென்னை மக்களின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதையடுத்து இணையத்தில் வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மக்களை பதற வைப்பதாக இருக் கின்றது.
சாலைகள் மழை நீரால் கடல் போல காட்சி யளிக்கின்றது. மேலும் இரு சக்கர வாகனங்கள், கார்கள் தண்ணீரில் அடித்து செல்லப்படுகின்றன. இதை யெல்லாம் பார்க்கும் போது மக்கள் வேதனையாக இருப்பதாக கூறி வருகின்றனர். இந்நிலையில் திங்க ளன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒரு வீடியோ வெளியானது.
விமான நிலையம் தண்ணீரால் சூழ்ந்து கடல் போல காட்சியளித்தது. இதையடுத்து சென்னை விமான நிலையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் திங்களன்று இரவு 11 மணி வரை செயல்படாது என குறிப்பிடப்பட்டது. காலை எட்டு நாடுகளில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட விமானம் தரையிறங்க முடியா மல் வானத்தில் வட்டமிட்டு வந்தது.இதையடுத்து அனைத்து விமானங்களும் பெங்களூருக்கு மாற்றி விடப்பட்டது. இதுபோல இனி ஏற்படக்கூடாது என்ப தற்காகவே சென்னை விமான நிலையம் இந்த அறி விப்பை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
12 ரயில்கள் முழுமையாக ரத்து
மிக்ஜம் புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று புறப்படும் 12 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 12 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு வர வேண்டிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி - சென்னை இடையேயான முத்துநகர் ரயில் திங்களன்று (டிச.4) ரத்து செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் - தாம்பரம் ரயில், மதுரை - சென்னை தேஜஸ் ரயில் ஆகியனவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை அனுப்பிவைத்திடுக!
அமித்ஷாவிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
மிக்ஜம் புயல் பாதிப்பு குறித்து தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்த உள்துறை அமைச் சர் அமித் ஷாவிடம் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை அனுப்பிவைக்க முதல் வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், “வங்கக்கடலில் குறைந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகியுள்ள மிக்ஜம் புயலினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பு கள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்தும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை தொலைபேசி வாயி லாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
அப்போது, தமிழக முதல்வர், சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட் டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளு டன் இணைந்து துரிதமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற னர் என்றும், கூடுதலாக தேசிய பேரி டர் மீட்புக் குழுவினரை தமிழ்நாட் டுக்கு அனுப்பி வைத்திடுமாறும் கேட்டுக் கொண்டார். உடனடி நிவா ரணப் பணிகளை மேற்கொண்ட பிறகு பாதிப்புகள் குறித்து உரிய கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு தேவைப்படும் உதவிகள் ஒன்றிய அரசிடம் கேட்கப்படும் என்றும் தெரி வித்தார். தமிழக முதல்வரின் கோரிக் கையை ஏற்று, உள்துறை அமைச்சர் அனைத்து உதவிகளும் வழங்கப் படும் என்று உறுதியளித்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 தேசிய பேரிடர்மீட்புக் குழுக்கள் அனுப்பிவைப்பு: தமிழக அரசு தகவல்
தமிழக அரசு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிக்ஜம் புய லால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் தேடல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் 9 குழுக்கள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம் உட்பட ஒரு சில மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள விரைந்துள்ளனர்.
மேலும், அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையின் 3 குழுக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு விரைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புயல் மற்றும் கனமழையின் காரணமாக பாதிப்பிற்குள்ளாகியுள்ள சென்னை, திரு வள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையின் 250 வீரர்கள் கொண்ட 10 குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.மேலும் 3 குழுக்கள் பெங்களூரிலிருந்து வரவழைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.