tamilnadu

img

தமுஎகச சார்பில் உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு

குடியரசு தினத்தையொட்டி அரசியல்  சட்டம் முகவுரையில் குறிப்பிட்டுள்ள ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசம் உள்ளிட்ட அம்சங்களை பாதுகாப்போம் எனும் உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு தமுஎகச சார்பில் சென்னை சைதாப்பேட்டை எம்சி ராஜா விடுதியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நடைபெற்றது. மூத்த தலைவர் ‘சிகரம்’ செந்தில்நாதன் தலைமை வகித்தார். சிபிஎம் மூத்த தலைவர் வே.மீனாட்சி சுந்தரம், தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, மாவட்டத் தலைவர் சி.எம்.குமார், நாடகவியலாளர் பிரளயன், கி.அன்பரசன், ஊடகவியலாளர் கவிதா முரளிதரன், வழக்கறிஞர்கள் காயத்ரி கந்தாடை, சவீதா முனுசாமி, சமூக செயற்பாட்டாளர் அப்துர் ரஹ்மான், எழுத்தாளர் கரன்கார்க்கி, முனைவர்கள் மஞ்சுளா, வெண்மணி, கமலக்கண்ணன், வீ.அன்பரசு, கவிஞர் நா.வே.அருள் உள்ளிட்டு ஏராளமானோர் கலந்து கொண்டனர்.