சென்னை, செப். 3 - பெங்களூருவில் உள்ள இராமேஸ்வரம் கபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு பர பரப்பை ஏற்படுத்தியது.
அப்போது, இராமேஸ்வரம் கபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த நபர் தான் காரணம் என பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்த லாஜே பழி போட்டார்.
இதுதொடர்பாக திமுக அளித்த புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கல கத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவு களின் கீழ் ஷோபா கரந்தலாஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஷோபா சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணை க்கு வந்த போது, செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஷோபா மன்னிப்புக் கோரினால் ஏற்கத் தயாராக இருப்பதாக, தமிழக அரசுத் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் தெரிவித்திருந்தார்.
ஆனால், அதில் சிக்கல்கள் இருப்பதாக ஷோபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறி யிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே ‘எக்ஸ்’ தளத்தில் மன்னிப்பு கேட்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் இந்த வழக்கு செவ்வா யன்று நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப் போது, ஷோபா கரந்தலாஜே சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தமிழக மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக தமிழ்நாடு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று ஷோபா கரந்தலாஜே தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு செப்டம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.