“வாக்காளர் விவரங்களை கேட்பதற்கு, பாஜக வேட்பாளருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. ஆனால் தெலுங்கானாவில் ஒரு சங்கி வேட்பாளர் இந்த அராஜகத்தை செய்துள்ளார். தேர்தல் ஆணையம் கேள்வி கேட்கவில்லை. தோல்வி பயத்தில் சங்கிகளின் அராஜகப்போக்கு மேலும் அதிகரிக்கவே செய்யும். உரியவகையில் மக்கள் இக்கும்பலை எதிர்கொள்ள வேண்டும்” என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.