விழுப்புரம், ஏப். 20- விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள காசிப் பாளையம் கிரா மத்தைச் சேர்ந்தவர் ராஜா (35). இவரது மனைவி அன்ன லட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண், 2 ஆண் குழந்தை கள். இவர்கள் குடும்பத்துடன் பூத்துறை கிராமத்தில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் தங்கி, விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். வழக்கம் போல் வியாழக்கிழமை காலை கணவன், மனைவி இருவரும் விவசாய வேலைக்கு சென்று விட்டனர். அப்போது வீட்டில் இருந்த 3 குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து அன்னலட்சுமி வீட்டிற்கு வந்த போது, 2 வயது ஆண் குழந்தையை காணவில்லை. மற்ற குழந்தைகளிடம் விசாரித்த போது, அந்த குழந்தை கிணற்றின் அருகே விளை யாடிக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து அவர் கணவர் ராஜாவிடம் கூறினார். கிணற்றில் குதித்து ராஜா குழந்தையை தேடினார். ஆனால் குழந்தை கிடைக்க வில்லை. இதையடுத்து தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீய ணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி குழந்தையை சடலமாக மீட்டனர். இதுகுறித்து ஆரோவில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.