tamilnadu

img

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி! அரியலூர் மாவட்டம் முதலிடம்

சென்னை, மே 10 - தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புத் (SSLC) தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் 91.55 சதவிகித மாண வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவர் கள் தேர்வு எழுதிய நிலையில், 8 லட்சத்து  18 ஆயிரத்து 743 பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். இது 91.55 சதவிகிதம் ஆகும். இது கடந்தா ண்டின் தேர்ச்சி விகிதத்தைக்காட்டிலும் அதிகமாகும்.

கடந்த 2022-2023 கல்வியாண்டில் ஒட்டு மொத்தமாக 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 மாண வர்கள் தேர்வு எழுதினர். இதில் 8 லட்சத்து  35 ஆயிரத்து 614 மாணவர்கள் தேர்ச்சி பெற்ற னர். தேர்ச்சி விகிதம் 91.39 சதவிகிதம். அத னுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு 0.16 சத விகிதம் மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அத்துடன் வழக்கம்போல இந்தாண்டும் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ள னர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய 4 லட்சத்து 47 ஆயிரத்து 061 மாணவி களில், 4 லட்சத்து 22 ஆயிரத்து 599 பேர்  தேர்ச்சி அடைந்துள்ளனர்.  தேர்ச்சி விகிதம் 94.54 சதவிகிதம் ஆகும். அதேநேரம், 4 லட்சத்து 47 ஆயிரத்து 203 மாணவர்களில், 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 88.58 சதவிகி தம் தேர்ச்சியாகும். 

இதன்படி மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் 5.96 சதவிகிதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும், கடந்த ஆண்டைக் காட்டிலும் மாணவிகளின் தேர்ச்சி சதவிகிதம் 0.12 சதவிகிதம் குறைவாகும். 

கல்வியில் முன்னுக்கு வந்த பின்தங்கிய மாவட்டங்கள்
தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய மாவட் டங்களில் ஒன்றான அரியலூர் மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதன் முறையாக மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 

இந்த மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக தேர்வெழுதிய 9 ஆயிரத்து 565 பேர்களில் 9 ஆயிரத்து 308 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.31 சதவிகித தேர்ச்சியாகும். மாண வர்கள் 96.41 சதவிகிதம் பேரும், மாணவிகள் 98.35 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டாவது இடத்தை சிவகங்கை மாவட்டம் பிடித்துள்ளது. இங்கு தேர்வெ ழுதிய 17 ஆயிரத்து 707 பேரில் 17 ஆயி ரத்து 179 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மூன்றா வது இடத்தைப் பிடித்திருக்கும் இராம நாதபுரம் மாவட்டத்தில் தேர்வெழுதிய 15 ஆயிரத்து 692 பேரில் 15 ஆயிரத்து 121 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

நான்காவது இடத்தை கன்னியாகுமரி மாவட்டம் பெற்றுள்ளது. 22 ஆயிரத்து 523 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 21 ஆயிரத்து 676 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐந்தாவது இடத்தை பிடித்துள்ள திருச்சி மாவட்டத்தில், தேர்வெழுதிய 33 ஆயிரத்து 176 பேரில், 31 ஆயிரத்து 594 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

கடந்த முறை முதலிடத்தைப் பிடித்த பெரம்பலூர் மாவட்டம், இந்தாண்டு 8-ஆவது இடத்தை பிடித்துள்ளது. இங்கு தேர்வு எழுதிய 7,865 பேர்களில் 7 ஆயிரத்து  454 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

வழக்கமாக முதலிடத்தை பிடிக்கும் விருதுநகர் மாவட்டம் இம்முறை 6 ஆவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்துள்ளது.

தலைநகர் சென்னை கடந்த முறை பெற்ற அதே 30-ஆவது இடத்தையே இந்த  முறையும் பிடித்துள்ளது. இங்கு 66 ஆயிரத்து 228 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 58 ஆயி ரத்து 416 மாணவர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

சென்னைக்கு அருகிலுள்ள திருப்பத் தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக் குறிச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங் கள் முறையே கடைசி 8 இடங்களைப் பிடித்துள்ளது.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம் வருமாறு:-

அரியலூர் - 97.31, சிவகங்கை - 97.02, இராமநாதபுரம்- 96.36, கன்னியாகுமரி - 96.24, திருச்சிராப்பள்ளி - 95.23, விருதுநகர் - 95.14, ஈரோடு - 95.08, பெரம்பலூர் - 94.77, தூத்துக்குடி - 94.39, விழுப்புரம் - 94.11, மதுரை - 94.07, கோயம்புத்தூர் - 94.01, கரூர் - 93.59, நாமக்கல் - 93.51, தஞ்சாவூர் - 93.40, திருநெல்வேலி - 93.04, தென்காசி - 92.69, தேனி - 92.63, கடலூர் - 92.63, திருவாரூர் - 92.49, திருப்பூர் - 92.38, திண்டுக்கல் - 92.32, புதுக்கோட்டை - 91.84, சேலம் - 91.75, கிருஷ்ணகிரி - 91.43, உதகை - 90.61, மயிலாடுதுறை - 90.48, தருமபுரி - 90.49, நாகப்பட்டினம் - 89.70, சென்னை - 88.21, திருப்பத்தூர் - 88.20, காஞ்சிபுரம் - 87.55, செங்கல்பட்டு - 87.38, கள்ளக்குறிச்சி - 86.83, திருவள்ளூர் - 86.52, திருவண்ணாமலை - 86.10, ராணிப்பேட்டை - 85.48, வேலூர் - 82.07.