tamilnadu

img

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு செல்லும் - உயர் நீதிமன்றம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வைத் தொடர்ந்து தமிழகத்தில் பயிற்சி வகுப்புகளில் சேர இயலாத ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவு பெரும் கேள்விக்குறியானது. இதைத்தொடர்ந்து அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மருத்துவம், பொறியில் படிப்புகளில் சேர 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. 
இந்நிலையில், தங்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசு உதவிபெறும் பள்ளிகள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி தலைமையிலான அமர்வு இன்று வெளியிட்ட தீர்ப்பில்,
“மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லும். மேலும், 5 ஆண்டுகளுக்கு பிறகு இடஒதுக்கீடு குறித்து மறுஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.