மணலூர்பேட்டை நூலகத்தின் 60 ஆவது ஆண்டு விழா
மணலூர்பேட்டை, மார்ச் 5 கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டையில் மார்ச் 5, 1965 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை சார்பில் கிளை நூலகம் தொடங்கப்பட்டு பல்வேறு வகை யான வாசகர்களுக்கும், போட்டித் தேர்வு எழுதும் மாண வர்களுக்கும் பயன்பட்டு வரு கிறது. இந்நூலகத்தின் 60 ஆவது ஆண்டு விழா புதன்கிழமை (மார்ச் 5) நடை பெற்றது. வாசகர் வட்டக் குழுத்தலைவர் கு.ஐயாக் கண்ணு தலைமை வகித்தார். நல் நூலகர் மு.அன்பழ கன் வரவேற்றார். மணலூர் பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் ரேவதி ஜெய்கணேஷ் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பெரும் புரவலர், புரவலர்களுக்கு தமிழக அரசின் பட்டயம் வழங்கி சிறப்புரையாற்றினார். பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் ப.குமார சாமி, பேராசிரியர் பா.சிவப்பிர காசம் ஆகியோர் தலா ரூ.1 லட்சம் செலுத்தி நூலகப் புர வலர்களாக இணைந்தனர். திருக்கோவலூர் வாசகர் வட்டக்குழுத் தலைவர் கவிமா மணி சிங்கார.உதியன் நூல கத்தை பயன்படுத்தி போட்டித் தேர்வு எழுதிவரும் மாணவிக ளுக்கு தன்னம்பிக்கையூட்டும் பாராட்டி பேசினார்.