ஆலந்தூர்,நவ.25- இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு திங்களன்று (நவ.25)அதிகாலை விமானம் வந்தது. இதில் 184 பயணிகள் இருந்த னர். இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவ தாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பயணிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வு அதி காரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 31 பயணி கள் தங்களது உள்ளாடை, கைப்பைகளில் தங்கத்தை மறைத்து வைத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களிடம் 6.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2.5 கோடியாகும். 31 பயணிகளும் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, ராம நாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்ட ங்களைச் சேர்ந்தவர்கள். ஒரே விமானத்தில் 31 பேர் உரிய ஆவணங்கள் இன்றி தங்கம் கொண்டு வந்துள்ளதால் இதன் பின்னணியில் தங்கம் கடத்தல் கும்பல் இருக்கும் என்று புலனாய்வு அதி காரிகள் சந்தேகிக்கிறார்கள். மேலும் தங்கம் கொண்டு வந்த 31 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.