அமெரிக்க ஏகாதிபத்தி யம் ஆப்கானிஸ்தான் மீது ஓராண்டில் 6500 குண்டு களை வீசியது. அதே அளவு குண்டுகளை பாலஸ்தீனம் மீது ஒரேவாரத்தில் இஸ் ரேல் வீசியுள்ளது என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார்.
‘இஸ்ரேல் ஆக்கிர மிப்பு போரை நிறுத்து; பாலஸ்தீனம் பாலஸ்தீனி யருக்கே’ என்ற முழக்கத் தோடு வெள்ளியன்று (நவ.3) சென்னையில் பேரணி நடைபெற்றது. தொழிற்சங்க இயக்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின.
அப்போது செய்தியாளர் களிடம் அ.சவுந்தரராசன் கூறியதாவது:
ஹமாஸ் அமைப்பு மீது தாக்குதல் என்ற பெயரில் பாலஸ்தீனத்தில், இஸ்ரேல் குண்டு மழை பொழிகிறது. இவ்வளவு கொடிய யுத்தம் இதுவரை நிகழ்ந்த தில்லை; சாவுகளும் ஏற்பட்ட தில்லை. அடுத்த தலை முறை இருக்கக் கூடாது என்ப தற்காக குழந்தைகளை கொன்று குவிக்கின்றனர். பாலஸ்தீனத்தை ஆக்கிர மிக்க இனப் படுகொலையை இஸ்ரேல் செய்கிறது. பாலஸ்தீன மக்கள் உயி ரோடு இருக்கும்போதே தங்கள் உடலில் அடை யாளங்களை பொறித்துக் கொள்கிற நிலை ஏற்பட் டுள்ளது.
பாலஸ்தீனர்கள் ஆக்கிர மிக்கப்பட்ட பால ஸ்தீனத்தை திரும்ப கேட் கின்றனர். ஐ.நா.தொடங் கப்பட்ட காலத்திலிருந்து பாலஸ்தீனம் தொடர்பாக நிறைவேற்றி வரும் தீர் மானங்களை மீறி இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது.
மத்திய ஆசிய பகுதியில் காலனிகளை உருவாக்க, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு துணை நிற்கின்றன. ஆப்பிரிக்க நாடுகள் மீது தாக்குதலை தொடுக்க பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தயா ராகி வருகின்றன. இதை ஏற்க முடியாது.
இந்திய அரசு தனது வெளியுறவு கொள்கையை மீறி நடந்து கொள்கிறது. `ஹிட்லரின் வாரிசாக இருக்க வேண்டும் என்று மோடி விரும்புகிறார். அதற்கேற்ப இன அழிப்பில் ஈடுபடுகிறவர்களை ஆதரிக்கிறார். இஸ்ரேலில் இருந்து உளவுக்கருவி, ராணுவ தளவாடங்களை இந்தியா வாங்குகிறது. மனித குலத்திற்கு எதிரான, கொடிய ஆக்கிரமிப்பு போரை நடத்தி, இனப்படு கொலை செய்கிற இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைபாட்டை இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். தொழிற்சங்கத் தலைவர் க.சுவாமிநாதன் ஒருங் கிணைப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஆறுமுகநயினார் (அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம்), சுனில் (இந்திய வங்கி ஊழி யர் சம்மேளனம்), அரவிந்த் சாமி (இந்திய மாணவர் சங்கம்), க.உதயகுமார் (தமிழக மக்கள் ஒற்றுமை மேடை), தீ.சந்துரு (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்), எஸ்.ரமேஷ்குமார் (அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம்), கோதண்டம் (அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம்), வி.தனலட்சுமி (அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்), ஆதவன் தீட்சண்யா (தமுஎகச) உள்ளிட்டோர் பேசினர்.