tamilnadu

img

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 577 வழக்குகளுக்கு தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 577 வழக்குகளுக்கு தீா்வு

காஞ்சிபுரம், செப்.15- காஞ்சிபுரம் ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளா கத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,933 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரே நாளில் 577 வழக்கு களுக்கு தீா்வு காணப் பட்டது. காஞ்சிபுரம் ஒருங்கி ணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதி மன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ. செம்மல் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வங்கி வாராக்கடன் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், தொழிலாளா் நல வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள் ஆகியவை உள்பட மொத்தம் 1,933 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ஒரே நாளில் 577 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதன் மூலம், மொத்தம் தீா்வுத் தொகையாக மட்டும் 7கோடியே 47லட்சத்தி 81ஆயிரத்து 325 ரூபாய் வழங்கப்பட்டது. வங்கி வழக்குகளில் மொத்தம் 1,346 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதன் மூலம் 55 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ. 62லட்சத்தி 86ஆயி ரத்து 300 ரூபாய் வசூ லிக்கப்பட்டது. முகாமின் நிறைவில் மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ. செம்மல் பயனாளிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக் கான காசோலைகளை வழங்கினார். இந்த முகாமிற்கு தொழிலாளா் நல நீதிபதி சுஜாதா, மோட்டார் வாகன தீா்ப்பாய நீதிபதி டி.ஜெயஸ்ரீ, தலைமைக் குற்றவியல் நீதிபதி மோகனாம்பாள், கூடு தல் சார்பு நீதிபதி திருமால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனா். நீதிபதிகள், வழக்குரைஞா்கள், பொது மக்கள், காஞ்சிபுரம் வட்டார சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் நிர்வாக உதவியாளா் சதீஷ்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.