tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மாமல்லபுரம் சாலை விபத்தில் உயிரிழந்த 5 பெண்கள்
முதல்வர் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி

சென்னை. நவ. 27 - பழைய மாமல்லபுரம் சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 5 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், பழைய மாமல்லபுரம் சாலை, பையனூர் மதுரா பண்டிதமேடு சந்திப்பில் இன்று (27.11.2024) பிற்பகல் 2.20 மணியளவில் திருப்போரூர் வட்டம், பையனூர் கிராமம், பாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆந்தாயி (71), லோகம்மாள் (56) யசோதா (54), விஜயா (53) மற்றும் கௌரி (52) ஆகிய 5 பெண்கள் சாலையோரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திருப்போரூரிலிருந்து மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் மேற்குறிப்பிட்ட 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம்

பெய்ரூட், நவ.27- இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் புதனன்று அதி காலை முதல் அமலானதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.  

மத்திய கிழக்கு நாடான லெபனா னில் உள்ள பாலஸ்தீன ஆதரவு இயக்க மான ஹிஸ்புல்லாவுடன் இஸ்ரேல் ராணுவம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக போரிட்டு வந்தது. லெபனான் தலைநகர் மீது தொடர்ந்து குண்டுகளை வீசி வான்வழித் தாக்குதலை தீவிரப் படுத்திய இஸ்ரேல், அண்மையில் ஹிஸ் புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா வை படுகொலை செய்ததுடன், அவ்வ மைப்பிற்கு தலைவராக பதவியேற்க இருந்த ஹாசிம் சபிதீனையும் படுகொலை செய்தது.

பாதிப்பைச் சந்தித்த தரைப்படை

கடந்த சில வாரங்களுக்கு முன் இஸ்ரேல் ராணுவம் லெபனானுக்குள் தரைவழித் தாக்குதலையும் துவங்கி யது. இதில் லெபனான் பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்த னர். இஸ்ரேல் தரைப்படையும் கணிச மான பாதிப்புகளையும் உயிரிழப்பை யும் சந்தித்தது.

போர்க்கால அமைச்சரவை ஒப்புதல்

இந்தப் பின்னணியிலேயே இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே திடீர் போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள் ளது. இஸ்ரேலின் யுத்தகால அமைச்ச ரவை, இந்த போர் நிறுத்தத்திற்கு அனு மதி அளித்துள்ளது. 

அமைச்சரவையில் போர்நிறுத்தத் திற்கு ஆதரவாக 10 அமைச்சர் களும், எதிராக ஒரே ஒரு அமைச் சர் மட்டுமே வாக்களித்துள்ளார்.

60 நாட்களில் இஸ்ரேல் வெளியேறும்

இந்த போர் நிறுத்தத்தின் தொடர்ச்சி யாக 60 நாட்களில் இஸ்ரேல் - லெப னான் எல்லையில் உள்ள இஸ்ரேல் ராணுவம் வெளியேறும் எனவும், அப்பகுதிகளில் லெபனான் ராணுவம் தனது நிலைகளை அமைத்துக் கொள்ளலாம்.

ஹிஸ்புல்லா அப்பகுதி யில் ராணுவ நிலைகளை அமைக்கா மல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த போர் நிறுத்தம் குறித்து ஈரான் அரசும், ஹிஸ்புல்லா, ஹமாஸ், அமைப்புகளும் அதிகா ரப்பூர்வமாக கருத்துக்களை தெரி விக்கவில்லை.