மதுராந்தகம், மார்ச் 12- மதுராந்தகம் அருகே கண்டெய்னர் லாரி மீது பேருந்து உரசியதால் படிக் கட்டில் பயணம் செய்த கல்லூரி மாண வர்கள் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம் பேட்டில் இருந்து அச்சரப்பாக்கம் வழி யாக மதுராந்தகம் நோக்கி பயணி களை ஏற்றி கொண்டு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மேல்மருவத்தூர் அருகே சிறுநாக லூர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது பேருந்து பக்க வாட்டில் உரசியதில், படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் தவறி விழுந்தனர். இந்த கோர விபத்தில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒரு கல்லூரி மாணவர் ரஞ்சித் பலத்த காயத்துடன் மதுராந்தகம் அரசு பொது மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்த மோனிஷ், கமலேஷ், தனுஷ், ரஞ்சித் உள்ளிட்ட நான்கு பேரும் மதுராந்த கத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வந்த னர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடல் களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக மதுராந்தகம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
படியில் பயணம் நொடியில் மரணம் என்று எத்தனையோ முறை சொன்னா லும் அதை பலரும் கேட்பதில்லை. பள்ளிக்கு செல்லும் போதும், பணிக்கு செல்லும் போதும் படியில் தொங்கிய படிதான் பயணம் செய்கின்றனர்.
முதல்வர் நிவாரணம்
மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தி ருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் பொது நிதியிலிருந்து தலா 2 லட்சம் ருபாய் வழங்கப்படும் என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தி ருக்கிறார்.