tamilnadu

img

இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தின் மீது தாக்குதல் - 4 பேர் கைது!

சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை, தி.நகரில் உள்ள தமிழ்நாடு மாநிலக்குழு தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் மீது நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பாட்டிலையும், கற்களையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து சிபிஐ நிர்வாகிகள் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், இவ்விவகாரத்தில் அலெக்ஸ், பாரதி, அருண்குமார், பார்த்திபன் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தின் பின்புறம் வசிக்கும் 4 பேரும் மதுபோதையில் காவலாளி சுதாகருடன் தகராறில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.