tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

தவெக உறுப்பினர் மீது ஆசிட் வீசிய 4 பேர் கைது

புதுவண்ணாரப்பேட்டையில் தமிழக வெற்றிக்கழகம் உறுப்பினர் மீது  ஆசிட் ஊற்றி விட்டு தப்பிய மற்றொரு  உறுப்பினர் உட்பட 4 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகரை சேர்ந்தவர் தினேஷ் (37). தமிழக வெற்றிக் கழக உறுப்பினர். இவர், திங்களன்று  அதே பகுதியில் அக்கட்சியின் பெயர் பலகை வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த சரத் என்பவர் அங்கிருந்த தினேஷை சரமாரி தாக்கி ஆசிட்டை எடுத்து அவரது தலையில் ஊற்றிவிட்டு தப்பினர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், பலத்த காயமடைந்த தினேஷை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். தினேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில், சரத் (24), நண்பர்களான சுபான் (20), ஜீவா நகரை சேர்ந்த சுரேஷ் ஆண்ட்ரூஸ் (31), மங்கம்மா தோட்டத்தை சேர்ந்த அரவிந்தன் (33) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


சென்னையில் போதை பொருள் விற்ற 2 பேர் கைது
-
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஹெராயின் விற்றதாக திரிபுராவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
 சென்னை பெருநகர காவல்துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினர் அபிராமபுரம், துர்காபாய் தேஷ்முக் ரோடு, சிவாஜி மணிமண்டபம் பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுக் கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனராம்.
 இதையடுத்து காவல் துறையினர், அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்து, விசாரித்தனர்.
 விசாரணையில் அவர்கள், திரிபுராவைச் சேர்ந்த ஜெ.சோஹ் மியா (24), து.அப்துல் மியா (24) என்பதும், இருவரும் சென்னை தரமணியில் தங்கியிருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதும் தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்

.
ராணிப்பேட்டையில் தனியார்  துறை வேலை வாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளியன்று (மார்ச் 28)  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங் மற்றும் பொறியியல் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வெள்ளி யன்று (மார்ச். 28) காலை 10 மணி அளவில் ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகைபுரிந்து கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04172-291400 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளார்.


போதை பொருள் விற்ற 2 பேர் கைது

 சென்னை பெருநகர காவல்துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினர் அபிராமபுரம், துர்காபாய் தேஷ்முக் ரோடு, சிவாஜி மணிமண்டபம் பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுக் கொண்டிருந்த இருவரை பிடித்து அவர்களின் உடமைகளை சோதனையிட்டனர். ஹெராயினை பறிமுதல் செய்து, விசாரித்தனர். பின்னர் இருவரையும் கைது செய்தனர்.