சென்னை வடபழனி போரம் விஜயா மால் வணிக வளாகத்தில் 3வது ஆண்டு குழந்தை உணவு சமையல் கலைஞர் சாம்பியன் போட்டி நடைபெற்றது.7முதல் 15வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதில் கலந்து கொண்டு கூட்டாஞ்சோறு, மாங்காய் சாதம், தேங்காய் பால் சாதம், சிறுதானியத்தில் சாம்பார்சாதம் உள்ளிட்ட பலவிதமான உணவுவகைகளை சமைத்துக்காட்டினர். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ்பட் பரிசுகளை வழங்கிப்பாராட்டினார்.