tamilnadu

மெட்ரோ ரயிலில் 3.81 கோடி பேர் பயணம்

சென்னை, மே 15- சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி தொடங்கப்பட்டது. தற்போது சில மெட்ரோ நிலையங்களில் இயங்கிக் கொண்டு இருக்கும்ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் டாக்சி சேவைகள் விரைவில்அனைத்து 32 மெட்ரோ நிலையங்களிலும் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பயணிகளின் பெரும் ஆதரவால் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து நாளுக்கு நாள் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மெட்ரோ ரயிலில் கடந்த 2015 ஜூன் 29 ஆம் முதல் இந்த மாதம் 14ஆம் தேதி வரைமொத்தம் 3 கோடியே 81 லட்சத்து 3 ஆயிரத்து 799 பேர் பயணம் செய்துள்ளார்கள்.ஜூன் 2015 முதல் டிசம்பர் 2015 வரை 26,33,890 பேர், ஜனவரி 2016 முதல் டிசம்பர் 2016வரை 36,30,216 பேர், ஜனவரி2017 முதல் டிசம்பர் 2017வரை 73,99,282 பேர், ஜனவரி 2018 முதல்டிசம்பர் 2018 வரை 1,43,88,969 பேர், 2019 ஜனவரி முதல் மே 14-ம்தேதிவரை 1,00,51,442 பேர் பயணம் செய்துள்ளார்கள் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

;