tamilnadu

img

37 நாட்கள் நீடித்த சாம்சங் தொழிலாளர் போராட்டம் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு

சென்னை,அக்.15- சாம்சங் தொழிலாளர்கள் 37 நாட்களாக போராடி வந்த நிலையில்,  அமைச்சர்களின் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத் தொழிலா ளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக அக்.14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்களாக சென்னை தலை மைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன்,டி.ஆர்.பி.ராஜா ஆகி யோர் தலைமையில் தொடர் துறை களின் அரசு அலுவலர்கள் சாம்சங்  நிர்வாகம் மற்றும் சிஐடியு சங்கத் தலை வர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை  நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை யில், சாம்சங் தொழிலாளர்களின் நல னைக் கருதி ஆலை நிர்வாகம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழி லாளர்களின் பிரதிநிதிகளிடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டது.

அ.சவுந்தரராசன் பேட்டி

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு  செய்தியாளர்களைச் சந்தித்த சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன், இன்றைய தினம் நடந்த பேச்சுவார்த்தை யில் 4 அமைச்சர் கள் மற்றும் தொழிலாளர் துறை  அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் இருந்து பேச்சுவார்த்தை சுமூகமாக சென்றது. இதில் சில நல்லஆலோசனைகளும் முடிவு களும் எட்டப்பட்டன.இந்த பேச்சு வார்த்தையில் எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை. எந்த குழப்பமும் இல்லை. வேறு பிரச்சனையும் கிடை யாது.சிறப்பாக நடைபெற்றது. புதன் கிழமை (இன்று) சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு.

பேரவைக் கூட்டம் நடை பெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு, நல்ல முடிவு எட்டப்படும்” என்றார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்வி களுக்கு பதில் அளித்த அவர், “சங்கத்தைப் பதிவு செய்யும் விவ காரம் நீதிமன்றத்தில் உள்ளது. 

எனவே. அந்த தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டோம். அதையே இப்போதும் சொல்கிறோம். மிக மிக முக்கிய மானது, நிர்வாகத்திற்கும் எங்கள்  சங்கத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. பொறுப்பு இருக் கிறது. அதைத்தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறோம். சாம்சங் நிர்வாகம் ஆரம்பத்தில் இருந்து எதையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தது. எங்கள் சங்கத்துடன் பேசவே மறுத்து வந்தனர். ஆனால், அமைச்சர்களின் அழுத்தம் மற்றும் மாநில அரசின் முயற்சி காரணமாக நாங்கள் முன்வைத்திருக்கும் சில கோரிக்கைகள் மீது செவி சாய்த்திருக்கிறார்கள். இதில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. 

எனவே, முதலமைச்சர் எடுத்த  முயற்சிக்கு பாராட்டு தெரிவிக் கிறோம். சாம்சங் நிர்வாகம் எங்களுடன் பேச வேண்டும் என்று வலியுறுத்தினோம். தற்போது, எங்களோடு என்ன பேச வேண்டும் என்பதுகுறித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. 

இதில் சுமூக உடன்பாடு எட்டப் படும் என்று நாங்கள் நம்பு கிறோம். நாங்கள் நடத்தும் பேரவை யில் எடுக்கும் முடிவை செய்தி யாளர்களுக்கு முறைப்படி அறி விப்போம்” என்றும் அவர் கூறி னார்.

“தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வது குறித்து பேர வைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப் படும். நாளை மறுநாள் கூட  வேலைக்குச் செல்ல தொழிலா ளர்கள் தயாராக உள்ளனர். இதில் எந்த பிரச்சனையும் இல்லை” என் றும் அ.சவுந்தரராசன் தெரிவித் தார்.

அரசு அறிக்கை

இதற்கிடையில், அரசு சார்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கை யில், “சாம்சங் தொழிலாளர் போராட்டத்தை விரைந்து முடி வுக்கு கொண்டுவர நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற் பட்டுள்ளது. அதன்படி. தொழில் அமைதி மற்றும்பொது அமைதி  காக்கும் வகையில் தொழி லாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்குச் செல்ல வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழி லாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும் போது நிர்வாகம் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது. வேலைநிறுத் தத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது. தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின் மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக பதி லுரையை சமரச அலுவலர் முன்பு  தாக்கல் செய்ய வேண்டும். 

இதனால், சாம்சங் தொழிற் சாலையில் நடைபெற்று வந்த  வேலை நிறுத்த போராட்டம் முடி வுக்கு வந்தது, தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப  உள்ளார்கள்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமைச்சர்கள் - சிஐடியு நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு!

சாம்சங் தொழிலாளர் பிரச்ச னைக்கு ஒரு இணக்கமான தீர்வு காணப்பட்டுள்ளமைக்கு அமைச்சர்கள் மற்றும் சிஐடியு நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் வருமாறு:

ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் நிறுவனத்தில், ஊதிய உயர்வு, தொழிற்சங்கத்தைப் பதிவு செய்தல், விடுப்புச் சலுகைகள் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, ஒரு மாதத் திற்கும் மேலாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த விவகாரத்தில், தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இடையேயான பிரச்ச னைக்குத் தீர்வு காணுமாறு, தொழி லாளர் நலத்துறைக்கும், தொழிற்துறை க்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறி வுறுத்தியிருந்ததன் பேரில், செவ்வாயன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டது. 

தொழிலாளர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைத்த சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி களுக்கும், அனைத்துத் தொழிலாளர் களுக்கும், சாம்சங் நிறுவனத்தின் நிர்வாகி களுக்கும், அமைச்சர்களுக்கும் பாராட்டுக் களையும், நன்றியையும் முதல்வர் தெரி வித்துள்ளார்.

அரசு மேற்கொண்ட தீவிரமான முயற்சிகளின் காரணமாக, தொழி லாளர்களின் தரப்பில் வலியுறுத்தப்பட்ட பல முக்கியமான கோரிக்கைகள் சாம்சங் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுமட்டுமன்றி, இருதரப்பிலும் நல்ல எண்ணங்களையும், நல்ல உறவுகளையும் ஏற்படுத்தும் வகையில் அவர்களிடையே ஒரு உடன்படிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தொழில் அமைதிக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழும் தமிழ்நாடு, தொடர்ந்து அந்த நற்பெயரை நிச்சயம் தக்கவைக்கும். அதற்கான முயற்சிகளை இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். தொழிலாளர் நலன் காக்க வேண்டும், தொழில்வளம் பெருக வேண்டும் என்ற இரண்டு நோக்கங்களை, தமது இரண்டு கண்களாகப் பாவித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும்.

தமிழ்நாடு தனது வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும்; தொழிலாளர் நலன் காண தொடர்ந்து உறுதுணையாய் நிற்கும்.