ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம் வாழைப்பந்தல் கிராமத்தில் 5 கைத்தறி நெசவாளர்களுக்கு வியாழனன்று (ஜூன் 13) தமிழ்நாடு அரசு வழங்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்கான சான்றிதழ்களை வாழைப்பந்தல் மின்சார வாரிய அலுவலகத்தில் இளநிலை உதவி பொறியாளர் வழங்கினார். இதில் கைத்தறி சங்க மாவட்ட அமைப்பாளர் எஸ். கிட்டு, வாழைப்பந்தல் கிளை நிர்வாகிகள், கிளை தலைவர் ஜி. ராஜசேகர், செயலாளர் பி. தேவன், பொருளாளர் பி. கோபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.