tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

சென்னையில் 30 பூங்காக்கள் நிறுவப்படும்

தமிழ்நாடு சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது, தியாகராயநகர் தொகுதி 130-வது வார்டு வடபழனியில் சிம்ஸ் மருத்துவமனைக்கு அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா என திமுக ஜெ. கருணாநிதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, “வடபழனியில் உள்ள மாநகராட்சி பூங்கா வில் சுமார் 2,010 சதுர மீட்டர் பரப்பளவில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கபடி, கிரிக்கெட், கைப் பந்து, சிறுவர்களுக்கான விளை யாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சிக்கான உபகரணங்கள், பூச்செடிகள், கழிவறைகள் அமைக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த பணிகள் முழுவதும் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும்”என்றார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பூங்காக்கள் மேம்படுத்தப்படுமா? என்று கருணாநிதி துணைக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “சென்னையில் 908 பூங்காக்க ளும், 724 விளையாட்டு அரங்கங்கள் பொது மக்கள் பயன்பாட்டில் உள்ளது. தற்போது 32 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணி ரூ. 8 கோடியில் நடைபெற்று வருகிறது. மேலும் 2025 - 2026 ஆம் ஆண்டில் 30 புதிய பூங்காக்கள் ரூ. 60 கோடியில் அமைக்கப்படவுள்ளது. 273 பூங்காக்கள் ரூ. 30 கோடியில் மேம்படுத்தப்படும்” என்றும் கூறினார்.

தனியார் வசம்  பூங்காக்கள் பராமரிப்பு

சென்னை மாநகராட்சி 10-வது மண்டலத்துக்கு உட்பட்ட பூங்காக்களின் பராமரிப்புப் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படுமா ? என்று தி.நகர் தொகுதி திமுக உறுப்பினர் ஜெ.கருணாநிதி  கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளிக்கையில், “சிறந்த நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டால் பூங்காக்களின் பராமரிப்புப் பணியை தனியார் களிடம் ஒப்படைக்க மாநகராட்சி அனுமதி தரும்”என்றார்.

தொல்காப்பியப் பூங்கா பராமரிப்புப்  பணிகள் விரைவில் நிறைவடையும்

சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னையில் உள்ள தொல்காப்பியப் பூங்கா பராமரிப்புப் பணிகள் விரைவில் நிறைவடையும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழக்  கிழமை(ஏப்.17)  கேள்வி நேரத்தின் போது, தொல்காப்பியப் பூங்கா பராமரிப்புப் பணி கள் எப்போது முடிவடையும் என்று திமுக உறுப்பினர் த.வேலு (மயிலாப்பூர்) துணைக் கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் கே.என்.நேரு அளிக்கை யில்,“சென்னையில் இப்போது 908 பூங்காக்க ளும், 724 விளையாட்டு அரங்கங்களும் மக்க ளின் பயன்பாட்டில் உள்ளன. அத்துடன், ரூ.8 கோடியில் 32 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.  நிகழ் நிதி யாண்டில் ரூ.60 கோடியில் 30 பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. அத்துடன், 273 பூங்காக்கள் ரூ.30 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளன. சென்னையில் உள்ள தொல்காப்பியப் பூங்கா ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டது. 10 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்தது. இப்போது பராமரிப்புப் பணி கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பூங்கா வானது சுற்றுச்சூழல் கல்வி ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வருகிறது. அங்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதுவரை 1,446 பள்ளிகளைச் சேர்ந்த 1.12 லட்சம் மாணவர்கள், 6,070 ஆசிரியர்களும் சுற்றுச்சூழல் கல்வி நிகழ்ச்சிகளால் பயனடைந்துள்ளனர். பூங்காவில் மறு மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. அங்கு, புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வை யாளர் மாடம், இணைப்புப் பாலம், குழந்தை களுக்கான விளையாட்டுப் பகுதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் விரைவில் நிறைவடையும். சாந்தோம் சாலையில் உயர்நிலை, சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன என்றார்.