tamilnadu

img

பள்ளி வாகனம் மோதி 2ம் வகுப்பு மாணவன் பரிதாப பலி

சென்னை வளசரவாக்கத்தில் பள்ளி வாகனம் மோதி 2ம் வகுப்பு மாணவன் பள்ளி வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில் வெங்கடேஸ்வரா என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் திஷித் என்ற மாணவர் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். திஷித் இன்று வழக்கம்போல் பள்ளி வேனில் சென்றுள்ளார். பள்ளிக்கு சென்ற பின் வேனில் இருந்து இறங்கி வகுப்பறைக்குள் சென்ற திஷித் தான் மறந்து வேனில் வைத்த பொருளை எடுக்க மீண்டும் வேனுக்கு சென்றார். அப்போது பின்நோக்கி வந்த வேன் மோதியது. இந்த விபத்தில் மாணவன் திஷித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
இச்சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் அறிக்கை அளிக்க மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.