அம்பத்தூர், ஆக.13- பொன்னேரி அருகே ஆள்மாறாட்டம் செய்து ரூ.1.25 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த வழக்கில் 2 பேரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் செவ்வா ய்க்கிழமை கைது செய்தனர்.
அம்பத்தூர் மவுனசாமி மடம் தெருவைச் சேர்ந்தவர் சேரன் (57). இவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இதற்கிடையில் 2003 ஆம் ஆண்டு, இவர் பொன்னேரி வட்டம், அலமாதி கிராமத்தில் 1.40 ஏக்கர் நிலத்தை வாங்கி அனுபவத்தில் வைத்திருந்தார். இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டு மே மாதம் அந்த நிலத்தில் சிலர் அத்துமீறி நுழைந்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து சேரன் நிலத்திற்கு வில்லங்கச் சான்று போட்டு பார்த்த போது, சேரன் போல சுரேந்தரன் என்பவர் ஆள்மாறாட்டம் செய்து வசந்திக்கு செட்டில்மெண்ட் கொடு த்தது போல் ஆவணம் தயார் செய்துள் ளார். அதனை வைத்து வசந்தி, வியாசர் பாடியைச் சேர்ந்த கோபால் என்பவருக்கு நிலத்தை விற்பனை செய்ய பொது அதிகாரம் கொடுத்துள்ளார். இதன் பிறகு, கோபால் அந்த நிலத்தை பிரபு, அருண் ஆகி யோருக்கு விற்பனை செய்துள்ளார். இதற்கு சாட்சியாக ரூபன், பால்துரை ஆகியோர் கையொப்பமிட்டு உள்ளனர். இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.1.25 கோடியாகும் என கூறப்படுகிறது. இது குறித்து சேரன் ஆவடி காவல் ஆணையரகத்தில் கடந்த மாதம் புகார் செய்தார். புகாரின் பேரில் நிலப் பிரச்சனை தீர்வு பிரிவு ஆய்வாளர் வள்ளி தலைமையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை, கொளத்தூர், ஜவகர் நகர், எஸ்ஆர்பி காலனியைச் சார்ந்த சுரேந்தரன் (51) மற்றும் கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகர், லிங்கேசன் தெருவைச் சேர்ந்த வசந்தி (58) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவர்கள் இருவரையும் பொன்னேரி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.