சென்னை, ஜன.6- தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையின் செயல்பாடுகள் குறித்து அதன் மாநிலத் தலைவர் செல்வகுமார், மண்டலத் தலைவர் முகமது பிலால் ஆகியோர் பேசினர். “108 சேவையைப் பொறுத்தவரை சென்னை உட்பட பல மாவட்டங்களில் இருந்து அழைப்பு வந்த 7 நிமிடங்களில் ஆம்பு லன்ஸ் உதவி கிடைக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட் டுள்ளன.
அதற்காக விபத்து நேரிட்ட வாய்ப்புள்ள பகுதிகள், முக்கிய இடங் கள், சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டில் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் 1,919,504 பேர் பயனடைந்துள்ளனர். அதில் பிரசவ சிகிச்சைக்காக மட்டும் 507,071 சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர, சாலை விபத்துகளில் சிக்கி 334,527பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், 1.19 லட்சம் இதய நோயாளிகளும், 33 ஆயிரம் குழந்தைகளும் பயனடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 1.05 லட்சம் பேர் பயன்பெற்றுள் ளனர். அதில் பிரசவ சிகிச்சை களுக்காக 6,044 கர்ப்பிணி கள் பயனடைந்துள்ளனர். சாலை விபத்துகளில் சிக்கி 10,659 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள் ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 91,084 பேர் பயனடைந்துள்ளனர். அவர்களில் 19,829 கர்ப்பிணி களும், சாலை விபத்துக் குள்ளான 15,866 பேர் பயன் பெற்றுள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.