tamilnadu

img

15ஆவது உயர்கல்வி மாநாடு

இந்தியத் தொழில்துறை மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் தில்லியில் அண்மையில் 15ஆவது உயர்கல்வி மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பான ஆராய்ச்சி சூழலை ஏற்படுத்தியதற்காக விஐடிக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி வழங்க விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், முனைவர் சேகர் விசுவநாதன் பெற்றுக் கொண்டனர். உடன் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் தலைவர் அனில் டி.சஹஸ்ரபுதே உள்ளார்.