சென்னை, ஆக. 28 - அரசு விரைவுப் போக்குவர த்துக் கழகத்திற்கு ரூ. 90.52 கோடி மதிப்பிலான பி.எஸ்.5 ரக 150 புதிய பேருந்துகள் வாங்கப் பட்டுள்ளன. இவற்றைப் பொது மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை பல்லவன் சாலை மத்திய பணிமனையில் புதன் கிழமை (ஆக.28) நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.எஸ். சிவசங்கர், பி.கே. சேகர் பாபு, மேயர் பிரியா, போக்கு வரத்துத் துறைச் செயலர் பணீந்திர ரெட்டி, போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் உள்ளிட்ட அரசின் உயர் அதி காரிகள் பங்கேற்றனர்.
அரசு விரைவுப் போக்கு வரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 200 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக தயாரான 150 புதிய பேருந்துகளைத் தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்துள்ளார்.
இந்த புதிய பேருந்துகளா னவை, மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பய ணிக்கும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வடி வமைக்கப்பட்டுள்ளன. குறிப் பாக, இந்தியாவில் முதல் முறை யாக அரசு விரைவுப் போக்குவ ரத்துக் கழகத்தில், பயணிகளின் சொகுசுப் பயணத்திற்காக பல் வேறு வசதிகள் செய்யப்பட்டுள் ளன. இத்துடன், மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளின் வச திக்காக 50 பேருந்துகளில் கீழ் படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், படுக்கை இரண்டி ற்கும் இடையே விசாலமான இடம் மற்றும் தடுப்பு வசதி வழங்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனி யாக சார்ஜிங் பொருட்கள், மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.