சென்னை, ஜூலை 6- திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்ற 146 பழங்குடியின இளை ஞர்களுக்கு பன்னாட்டு நிறுவன மான ‘ரானே ஆட்டோமோட்டிவ் இந்தியா லிமிடெட்’ மற்றும் தமிழ் நாட்டிலுள்ள தலைச் சிறந்த இந்திய நிறுவனங்களில் பணியாற்றுவதற் கான நியமன ஆணைகளை முதல் வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாட்டில் உள்ள கள்ளக் குறிச்சி, தருமபுரி, சேலம், திரு வண்ணாமலை, நாமக்கல், திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பு, பொறியியல், தொழில் நுட்பக்கல்வி, ஐடிஐ படித்து வேலையில்லாமல் உள்ள இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி, அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் வாழ தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை யின் மூலம் திட்டம் வகுக்கப் பட்டது.
அதன் அடிப்படையில், மலைப் பகுதிகளில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் உண்டு- உறைவிட பள்ளிகளின் தலைமை ஆசிரியர் கள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசி ரியர்கள், துறைச் சார்ந்த மாவட்ட திட்ட அலுவலர், மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் ஒத்துழைப்புடன் மலைப்பகுதிகளில் உள்ள கிரா மங்களுக்கு நேரடியாக சென்றனர். இங்கு தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும், பழங்குடியின வேலை யில்லாப் பட்டதாரி இளைஞர்கள் 450 நபர்களை திரட்டி திருச்சி, சேலம் மற்றும் சென்னை மாவட்டங் களில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட் டது.
அக்கூட்டத்தின் முடிவில் தகுதி வாய்ந்த 200 பழங்குடியின இளை ஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பிப். 13 அன்று சென்னை கலை வாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வ ராஜ் முன்னிலையில் தேர்வு செய் யப்பட்ட 200 பழங்குடியின இளை ஞர்களுக்கு பயிற்சிக்கான ஆணை கள் வழங்கப்பட்டது.
பயிற்சி ஆணைகள் பெற்ற 200 பழங்குடியின இளைஞர்களுக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகத்தின் மூலம் தெரிவு செய்யப் பட்ட கர்நாடக மாநிலம், பெங்களூ ருவில் உள்ள பயிற்சி நிறுவனத் தின் மூலம் மூன்று மாத காலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப் பட்டது.
பயிற்சியின்போது அந்த இளை ஞர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் அனைத்தும் பழங்குடி யினர் நலத்துறையின் மூலம் வழங் கப்பட்டது. திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்ற இளைஞர்களின், 146 இளைஞர்களுக்கு பன்னாட்டு நிறுவனமான ‘ரானே ஆட்டோ மோட்டிவ் இந்தியா லிமிடெட்’ மற் றும் தமிழ்நாட்டிலுள்ள தலைச் சிறந்த இந்திய நிறுவனங்களின் மூலம் நேர்முக தேர்வுகள் நடத் தப்பட்டு அவர்களின் கல்வித் திறன் மற்றும் தனிப்பட்ட திறமைகளின் அடிப்படையில் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூலை 6) தலைமை செயலகத்தில் வழங்கி, வாழ்த்தினார். பணி நியமன ஆணை கள் வழங்கப்பட்ட 146 இளைஞர் களில், 106 ஆண்கள் மற்றும் 40 பெண் கள் ஆவர்.
‘ஆருயிர் - அனைவரும் உயிர் காப்போம்’
‘ஆருயிர் - அனைவரும் உயிர் காப்போம்’ என்ற திட்டத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் அனைவருக்கும் அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், இந்த திட்டத்தின் கீழ் அனைவருக்கும் அடிப்படை உயிர் காக்கும் பயிற்சி தரப்பட உள்ளது.