கடலூர் மாவட்டம் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த சாரணர் 12 பேரும் சாரணியர் 22 பேருக்கும் உயரிய ராஜபுரஸ்கார் விருதினை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார். விருதுபெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஜெயந்தி, ஆனந்தி, கதிரவன், விக்னேஷ், உமா ஆகியோரை பள்ளியின் தாளாளர் வீனஸ்குமார், முதல்வர் ரூபியாள் ராணி, துணை முதல்வர் அறிவழகன் ஆகியோர் பாரட்டினர்.