tamilnadu

img

12 அம்ச கோரிக்கைகள் அமல்படுத்தக்கோரி டிட்டோ - ஜாக்டோஜியோ ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை, ஜூன் 29 –
 ராணிப்பேட்டை மாவட்டம், தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ - ஜாக்) சார்பில் மாநில உயர்மட்டக்குழுவிடம் பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகளுக்கு ஆணை பிறப்பிக்க கோரி முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் வெள்ளியன்று (ஜூன். 28) கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளர் சி. சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைமை நிலையச் செயலாளர், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாவட்டச் செயலாளர் பா.பாலமுருகன், மாநில, மாவட்ட நிர்வாகிகள், மகளிரணி, ஓய்வு பிரிவு செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஆ. வெங்க டேசன், தலைவர் தே. வெங்கட்ராமன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்ட செயலாளர் பொ. யோசுவா, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செ. சரவணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இறுதியாக தொடக்க, நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் கே. பழனிவேல் நன்றி கூறினார்.