தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில் நகரம் கும்பகோணம் அருகில் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தின் பட்டுப் புடவை என்றாலே பெண்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஒன்றிய பாஜக அரசின் ஐந்து முனை ஜிஎஸ்டி வரியால் பட்டுப்புடவையின் விலை பல மடங்கு அதிகரித்ததால் விற்பனை யாகாமல் சுமார் ரூ. 102 கோடி மதிப்புள்ள புடவைகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் திருபுவனம் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
இதுகுறித்து சிஐடியு கைத்தறி நெசவாளர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் என். பி.நாகேந்திரனை சந்தித்து விபரம் கேட்டோம்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் பேரூராட்சியில் திரு புவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (இசட் 322 ) உள்ளது.
இச்சங்கம் 1955 ஆம் ஆண்டு துவங்கப் பட்டது. 1955 ஆம் ஆண்டிற்கு முன் பட்டு கைத்தறி நெசவாளர்கள் தனியார் பட்டு உற்பத்தியாளரிடம் தறி நெய்து வந்தனர். அங்கு வேலைக்கு ஏற்ற கூலி கிடைக்காமல் வறுமையில் வாடிக் கொண்டிருந்த போது அன்றைய தொழிற்சங்க தலைவர்கள் ஸ்ரீவில்லி புத்தூரில் இருந்து சென்னை வரை நடை பயண மாக சென்றனர். அங்கு அன்றைய தமிழக முத லமைச்சர் ராஜாஜியை சந்தித்து நெச வாளர்கள் நிலைமையை சொன்ன போது பேச்சுவார்த்தையில் கைத்தறி நெசவாளர் களுக்காக கூட்டுறவு சங்கங்கள் துவங்குவது என முடிவு செய்யப்பட்டது.
1955-இல் கூட்டுறவு சங்கம் துவக்கம்
1955இல் தமிழகத்தில் முதல் முதலாக திருபுவனம், காஞ்சிபுரம், கும்பகோணம் என ஐந்து இடங்களில் பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் துவங்கப்பட்டன.
100 கைத்தறி நெசவாளர்களை அங்கத்தினர்களாக கொண்டு துவங்கிபட்டு புடவைகளை கைத்தறி நெசவால் உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டது. தரமான முறுக்குப்பட்டு தயாரித்துதான் விற்பனை செய்யப்படுகிறது. தரமான பாவு, அசல் வெள்ளி, தங்கம் முலாம் பூசிய ஜரிகை, நேர்த்தி யான நெசவு, வண்ணங்கள் கலையாத உத்தர வாதமான சாயத்துடன் தயாரிக்கப்படுகின்றன.
தற்போது ஒரு புடவையில் 100 கிராம் ஜரிகை பயன்படுத்தப்பட்டிருந்தால் அதில் 38 கிராம் முதல் 40 கிராம் வரை வெள்ளியும் 0.5 சதவிகிதம் தங்கமும் இருக்கும். முறுக்கு பட்டினால் தயாரிப்பதினால் சேலையின் ஆயுள் அதிகம். ஆடைகளின் ராணி என்று பட்டுப் புடவைகளை சொல்வது உண்டு. அழுக்குகளை எளிதில் பட்டுப் புடவைகள் ஏற்றுக் கொள்ளாது.
இத்தனை சிறப்பு அம்சங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டுப் புடவைகளின் விற்பனை திருபுவனம் கூட்டுறவு சங்கம், திகோ சில்க்ஸில் மெல்ல மெல்ல வியாபாரம் 1955-இலிருந்து அதிகரிக்க ஆரம்பித்தது. விற் பனைக்கு அதிக புடவைகள் தேவைப்பட்டதால் உற்பத்தியும் நெசவாளர் அங்கத்தினர் எண்ணிக்கையும் அதிகரித்து தற்போது 1800 நெசவாளர்கள் அங்கத்தினர்களாக உள்ளனர்.
20 கிளைகள் மூலம் விற்பனை
சங்கத்தின் தேவை கருதி 100 பணி யாளர்கள், 20 சாயப் பணியாளர்கள் சங்கத்தில் பணியாற்றி வருகிறார்கள். திருபுவனத்தில் தலைமை விற்பனை நிலையத்தில் பெரிய விற்பனை ஷோரூம் உள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கடலூர், உள்ளிட்ட 20 கிளை விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை நடைபெற்று வருகிறது.
2021 நிதியாண்டில் ரூ.56 கோடிக்கும் 2022 நிதியாண்டில் ரூ.52 கோடிக்கும் விற்பனை யானது. இந்த ஆண்டு இதுவரை ரூ.39 கோடி மட்டுமே வியாபாரம் நடைபெற்று உள்ளது. இந்தியாவில் இயங்கும் மிகப்பெரிய கைத்தறிப் பட்டு கூட்டுறவு சங்கம் இதுவாகும். இரண்டு முறை தேசிய விருதும், மூன்று முறை மாநில அரசின் விருதும், சிறந்த வடிவமைப்பு, சிறந்த நெசவாளர் விருதுகளும் சங்கம் பெற்றுள்ளது. 2021 ஆம் நிதியாண்டில் ரூ.56 கோடி வியாபாரமும் ரூ.7 கோடி நிகர லாபமும் 2022 ஆம் ஆண்டு ரூ.52 கோடி வியாபாரமும் ரூ.8 கோடி நிகர லாபம் கிடைத்தது. லாபத்தின் அடிப்படையில் அங்கத்தினருக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
நல்ல முன்னேற்ற நிலையில் இயங்கி வந்த இச்சங்கம் தற்சமயம் வியாபாரப் பின்னடைவு ஏற்பட்டு பட்டுச் சேலைகள் சரக்கு இருப்பு அதிகமாகியுள்ளது. தற்போது ரூ.102 கோடி அளவிற்கு சரக்கு தேக்கம் உள்ளது. இதனால் தறி நெய்யும் அங்கத்தினர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது தமிழக அரசு தள்ளுபடி மானியம் 20 சதவீதம் அதிகபட்சம் 300 ரூபாய்க்கு மிகாமல் வழங்குகிறது. நூல் புடவைகள், காட்டன் புடவைகள் ரூபாய் 1000 முதல் 1500க்குள் கிடைக்கும். இந்த சூழ்நிலையில் பட்டுப்புடவைக்கு 300 ரூபாய் என்பது பெரிய உதவியாக இல்லை.
மூலப் பொருள் விலை உயர்வு
அசல் பட்டுப்புடவை என்பது ஆரம்ப விலையே ரூபாய் 6000 முதல் துவங்குகிறது. முகூர்த்த பட்டுப்புடவை ரூ.35 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை உள்ளது. மேலும் பட்டுப் புடவையின் விற்பனை குறைவிற்கு காரணம் பட்டுப்புடவையின் மூலப் பொருள் களான கச்சாபட்டின் விலை உயர்வும், வெள்ளி ஜரிகை விலை உயர்வும் தான்.
கடந்த இரண்டு ஆண்டிற்கு முன் ஒரு கிலோ கச்சாப் பட்டு விலை ரூபாய் 3500. தற்போது ஒரு கிலோ பட்டு ரூ.7000. ஜரிகை விலையும் அதேபோல் தான். 240 கிராம் கொண்ட ஒரு மார்க் ஜரிகை விலை இரண்டு வரு டத்திற்கு முன் ரூபாய் 11,000 ஆக இருந்தது. இன்றைய தினம் 17,000 ஆகும். இதனால் பட்டுச்சேலையின் விலை உயர்ந்துள்ளது. மேலும் கைத்தறி பட்டுப்புடவை குடிசைத் தொழிலாக இருந்து, இதற்கு எந்த இடத்திலும் வரி இல்லாத தொழிலாக நடைபெற்று வந்தது.
ஐந்துமுனை வரி
ஆனால் தற்போது பட்டுச்சேலை உற்பத்திக்கு முன் பட்டுப்புழுவில் இருந்து கூடு எடுத்து பிரித்த பின் கச்சா பட்டாக மாறும்போது வரி, கச்சா பட்டு விற்பனை வரி, சாய பவுடர் வரி, சாயமிட்டபின் கலர் மாவு பட்டிற்கும் வரி, பட்டுச் சேலை உற்பத்தி செய்யும் தளவாடங்களுக்கும் வரி, சேலை விற்பனை வரி என ஐந்து முனைகளில் ஜிஎஸ்டி வரி போடுவதினாலும் கைத்தறிப்பட்டுச் சேலை விலை உயர்ந்துள்ளது.
சந்தை விற்பனையில் கைத்தறிப்பட்டுச் சேலை போல், போலிப்பட்டு சேலைகள் வருகை. இதில் பட்டுச்சேலை உற்பத்தி என்றே சட்டப்படியான ரக பாதுகாப்பு சட்டம் இருந்தது. பட்டு ரகம் பூராவும் விசைத்தறி மில்தறியில் உற்பத்தி செய்யப்பட்டு போலி பட்டுப் புடவை கள் சந்தையில் வந்ததனால் விற்பனை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படி விற்பனை பாதிப்பு ஏற்பட்டு கூட்டுறவு சங்கங்களில் தேக்கம் ஏற்பட்ட போது எல்லாம் நெசவாளர் நலன் கருதி அரசு, தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாட்களில் அரசு தள்ளுபடி மானியம் வழங்கப்பட்டு 10%, 20% என வழங்கப்பட்டு கூட்டுறவு சங்கங்களை யும் பாதுகாத்து வந்துள்ளது.
ரூ.5000 கோடி சரக்கு தேக்கம்
கூட்டுறவு சங்கங்களின் தாய் ஸ்தாபனமான கோஆப்டெக்ஸ் கொள்முதல் செய்து வந்தது. தற்போது கோ ஆப் டெக்ஸ் கொள்முதல் நடைபெறவில்லை. திருபுவனம் கூட்டுறவு சங்கங்களை போல் காஞ்சிபுரம், ஆரணி, சேலம் பகுதிகளிலும் தமிழகம் முழுவதும் ரூபாய் 5000 கோடி அளவிற்கு சரக்கு தேக்கம் உள்ளதாக அறியப்படுகிறது.
ஆகவே உடனடியாக மேற்கண்ட கூட்டுறவு சங்க நெருக்கடியை நீக்கவும் நெச வாளர்களை பாதுகாக்கவும் தமிழக அரசு சிறப்புத் தள்ளுபடி மானியம் நிபந்தனையின்றி 30 சதவீத ரிபேட் வழங்க வேண்டும். கோ ஆப் டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்ய வேண்டும். பல முனை வரிகளை ரத்து செய்து பொது மக்கள் வாங்கும் வகையில் விலை நிர்ணயம் செய்து நெசவாளர்கள் வாழ்வா தாரம் காக்கப் பட வேண்டும் என்று கூறி னார்.
நேர்காணல் : குடந்தை சரவணன்