கலைஞர் தமிழ் குறித்து 100 நூல்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை, மார்ச் 9- சென்னை தேனாம்பேட்டை யில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் நூற் றாண்டு விழாவை முன்னிட்டு, ‘கலை ஞர் தமிழாய்வு இருக்கை’ சார்பில் 100 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற் றது.
கலைஞர் தமிழாய்வு இருக்கை குழு வின் தலைவர் அமைச்சர் மா. சுப்பிரமணி யன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பி னர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்ட மன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, பிர பாகர் ராஜா, திமுக அமைப்புச் செயலா ளர் ஆர்.எஸ். பாரதி, செய்தி தொடர்புத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஔவையார் விருதுக்கு தேர்வு
எழுத்தாளர் பாமாவிற்கு தீ.ஒ.மு. வாழ்த்து
சென்னை, மார்ச் 9- 2024 ஆம் ஆண்டுக்கான தமி ழக அரசின் ‘ஔவையார்’ விருது பெறும் எழுத்தாளர் பாமா விற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வாழ்த்துக் களை தெரிவித்துள்ளது.
“தலைமுறை தலைமுறையாக பெரும் உழைப்பைச் செலுத்த வேண் டிய நிலையிலேயே தலித்துக்களின் வாழ்வு இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கி றது. அந்த வகையில், வாழ்தலுக்கிடை யில் சிதைவுக்குள்ளாகிற தலித்துக் களின் மனித மாண்பும், தவிப்பும், போராட்டமுமாக இருக்கிற தலித் பெண் களின் வாழ்வு/ இவைகளை எல்லாம் பேசுவது தான் “கருக்கு” பாமாவின் நாவல்கள். ஔவையார் விருது பெருமை கொள்கிறது. தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்” என்று தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் தெரி வித்துள்ளார்.